Wednesday, May 28, 2008

யாழ் சுதாகர் - ஒரு அறிமுகம்


நீங்கள் சென்னையில் இருப்பவரா? இரவு நேரங்களில் பழைய பாடல்களை விரும்பி கேட்பவரா? சூரியன் பண்பலையில் இரவு பதினொரு மணி முதல் நள்ளிரவு மூன்று மணி வரை அதிமதுர பாடல்களை தொகுத்து வழங்குகிறார் இந்த யாழ் சுதாகர். இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர்களின் குரலை நமக்கு நினைவூட்டி விடுவதோடு பாடல்களின் ராகம், அதனைப் பற்றிய சில சுவராஸ்யமான தகவல்களோடு அவரது இனிய குரலில் பழைய பாடல்களை கேட்பதற்கு மிகவும் சுகமாக இருக்கிறது... அவரது குரலுக்கு அடிமையான ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரு நாள் கேட்டுப்பாருங்கள் ஆயிரத்தில் ஒருவனாக நீங்களும் ஆகி விடலாம்.

5 comments:

கிஷோர் said...

காற்றுமண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கிகொண்டிருக்கும் சூரியன் பண்பலை!!!

நல்ல குரல்வளம்.

அதே போல் மிர்ச்சியில் முன்பு இரவு 11 மணிக்கு காதல் டாக்டரில் சிவாவும் கலக்கிகொண்டு இருந்தார்.

யாழ் சுதாகர் said...

நன்றி தோழர் கல்யாண குமார் அவர்களே....

Athisha said...

அவரது குரலும் பாடல்கள் குறித்தான அவரது வர்ணணையும் பல இரவுகளில் தாலாட்டாய் ஒலித்திருக்கிறது .

அவரது அறிமுகத்துக்கு நன்றி

Tech Shankar said...



Thanks.

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...