Sunday, May 18, 2008

இன்றைய கவிதை


கோலமா அழகு?
நீர் தெளித்து
வாசலில்
நீயிட்ட கோலத்தைவிட,
வீட்டுக்குள்
நுழையுமுன்
போட்டு முடித்த
கோலத்தை
திரும்பி நின்று
ஒருநொடி நீ விரும்பி
ரசித்த கோலமே
அழகிலும்
அழகடி!

4 comments:

KARTHIK said...

நல்லாருக்கு.

நாமக்கல் சிபி said...

அழகான கோலம்!

கவிதையும் கூட!

ராமலக்ஷ்மி said...

மறுபடி ஒரு நொடி நின்று ரசித்தேன், கோலத்தையும் கவிதையையும்.

Sivakumar said...

வாவ்... சூப்பர் சார்... எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?