Friday, April 25, 2008

பதினாறு வயதினிலே - ஒரு ப்ளாஷ்பேக்

யக்குனர் பாரதிராஜா 'மயில்' என்ற அந்த ஒரு கதைக்காக பாடுபட்டதையே ஒரு படமாக எடுக்கலாம். அதன் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்து திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் கதை சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டார்கள். அதன் பிறகு சில திரைப்பட நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளர் ராஜ்கன்னுவை சந்தித்து அதே கதையை அவரிடம் சொன்னபோது அவருக்கு அது ரொம்ப பிடித்துப் போனது. உடனே ஹீரோ தேர்வு. பாரதிராஜாவின் மனதில் இருந்த ஹீரோ யார் தெரியுமா?

நாகேஷ்!

கருப்பு வெள்ளையில் நாகேஷை ஹீரோவாக நடிக்கவைக்கும் முயற்சியில் ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கின. ஆனால் கதை விவாதத்தில் இந்தக் கதைக்கு சிவக்குமார் நன்றாக இருப்பார் என முடிவானது. அவரைப் போய் பார்த்தபோது அவர் ரொம்ப பிசி. ஆனாலும் கதை நன்றாக இருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் சம்பளம் ஐம்பதாயிரம் என்றதும் தயாரிப்பாளர் யோசிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் கமல் வளர்ந்து வரும் நடிகர். அவரை வைத்து எடுக்கலாம் என முடிவானது. ஜோடியாக ஸ்ரீதேவி . இவர்களை வைத்து கருப்பு வெள்ளை படமா என்று யோசித்த தயாரிப்பாளர் படத்தை கலரில் எடுக்க முடிவெடுத்தார். காமிராமேனாக நிவாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . முழுப்படத்தையும் மைசூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் படமாக்க திட்டமிட்டார் பாரதிராஜா.

வில்லனாக ரஜினி , காந்திமதி , கவுண்டமணி என்று ஒரு பட்டாளத்தையே வைத்து நாற்பது நாளில் படத்தை முடித்தார் பாரதிராஜா. மயில், என்கிற அந்தக்கதை கலைமணியின் வசனத்தில் பதினாறு வயதினிலே என்ற தலைப்பில் வெளியானது. ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமென பாரதிராஜாவே எதிர்பார்க்கவில்லையாம். குமுதம் ரிப்போர்ட்டர் தன்னை பார்க்க வந்தபோதுதான் படத்தின் வெற்றியை தான் உணர்ந்ததாக பாரதிராஜாவே சொல்கிறார்.

அந்தப் படத்தின் மூலமாக ஒரு நீண்ட இயக்குனர் வாரிசை உருவாக்கியவர் பாரதிராஜா. அதன் மூலமாக பாக்கியராஜ். அவரிடமிருந்து பார்த்திபன். அவரிடமிருந்து விக்ரமன். அவரிடமிருந்து கே. எஸ். ரவிகுமார். அவரிடமிருந்து சேரன். இப்படி நீள்கிறது அந்த இயக்குனர் வாரிசு.

3 comments:

சிவசுப்பிரமணியன் said...

அப்போ அடுத்தது நீங்க தானா!! 16 வயதினிலே பற்றி தெரியாத தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

வால்பையன் said...

விரைவில் நீங்களும் ஒரு படமெடுக்க வாழ்த்துக்கள்
கே.எஸ்.ஆரை கேட்டதாக சொல்லுங்கள்

வால்பையன்

வால்பையன் said...

விரைவில் நீங்களும் ஒரு படமெடுக்க வாழ்த்துக்கள்
கே.எஸ்.ஆரை கேட்டதாக சொல்லுங்கள்

வால்பையன்