tag:blogger.com,1999:blog-87534932420754855232024-03-13T15:34:42.273-07:00உதயம்அன்பு ஒன்றே அனைத்தையும் சாதிக்கும்...கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-22491285387291553512015-03-05T06:28:00.000-08:002015-03-05T06:28:29.888-08:00பாண்டியில் ஒரு பண்பாளர்அண்மையில் பாண்டிச்சேரிக்குப் போயிருந்தபோது நண்பர்கள் மூலம் அறிமுகமானார். மதன் என்கிற சாய்சூர்யா. இவரது தந்தை இளங்கோவன், நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து மறைந்தவர். அவரது நல்லெண்ணம், அடுத்தவர்க்கு உதவும் குணம், சேவை மனப்பான்மை அனைத்தையும் அவர் தனக்கு அளித்த சொத்தாகவே கருதி இந்த மைந்தன் சாய்சூர்யா ஒரு வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டே பாண்டியில் தான் வசிக்கும் கோட்டைக்குப்பம் என்ற பகுதியில் பல்வேறு விதமான பொதுச் சேவைகளைச் செய்து அந்தப் பகுதி மக்களின் மனதில் பதிந்திருக்கிறார்.<br />
இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற முடிவோடு பல இளைஞர்களை ஒன்று சேர்த்து ’சமூக சேவை விழிப்புணர்வுக் கழகம்’ என்ற அமைப்பை கடந்த 11. 11. 11 அன்று துவக்கிய சாய் சூர்யா அந்த அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறார். தொகுதிவாரியாக பல்வேறு தரப்பு இளைஞர்களை இனம்கண்டு அவர்களுக்கு தமது விழிப்புணர்வுக் கழகத்தின் பொறுப்பாளர் பதவியையும் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி, அந்தந்த பகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்த மூலகாரணமாக இருந்து வருகிறார்.<br />
பணமிருந்தால்தான் நற்காரியங்களைச் செய்ய முடியும் என்ற கண்ணோட்டத்தை தகர்த்து மணம் இருந்தால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு பல்வேறு இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தரம், திறமைகேற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும் முனைப்பாக இருக்கிறார் இந்த சாய் சூர்யா. <br />
சமீபத்தில் இவரது சேவை அமைப்பின் மூன்றாமாண்டு துவக்க விழாவில் பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது பெற்றோர், உட்பட பலரது உடல் உறுப்பு தான உறுதிப் பத்திரத்தை பாண்டி நியூ மெடிக்கல் சென்டர் இயக்குனர் டாக்டர் அர்ஜூன் அவர்களிடம் வழங்கி உறுப்பு தானம் குறித்த ஓர் விழிப்புணர்வையும் பாண்டியில் ஏற்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற பல்வேறு விதமான சேவைகள் பாண்டி மற்றும் தமிழகம் முழுக்க செயல்பட தனது அமைப்பு கடுமையாக உழைக்கும் என்கிற சாய் சூர்யாவின் வார்த்தைகளில் உண்மையும் உறுதியும் வெளிப்படுகிறது.<br />
அவரது சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துவோம் வாருங்கள். நம்மைப் போன்றவர்களின் வாழ்த்துகள்தான் இதுமாதிரி சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. <br />
அவரோடு இணையவும், வாழ்த்தவும் தொடர்புக்கு: 9094955447.<br />
இமெயில்: join_ssvk@yahoo.com<br />
<br />
<a href="http://1.bp.blogspot.com/-s94ewq7gW2w/VPhn80x12UI/AAAAAAAAArA/GBCfr2XJ6UA/s1600/IMG_20150204_085156.jpg" imageanchor="1" ><img border="0" src="http://1.bp.blogspot.com/-s94ewq7gW2w/VPhn80x12UI/AAAAAAAAArA/GBCfr2XJ6UA/s320/IMG_20150204_085156.jpg" /></a>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-3249758176797969272012-10-31T03:00:00.002-07:002012-10-31T03:00:21.827-07:00ராஜா ராஜாதான் - 2<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-Go2EMEuZXKw/UJD0DZQboDI/AAAAAAAAAcU/TLf9LWYYx6U/s1600/ilayarajah.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="268" src="http://3.bp.blogspot.com/-Go2EMEuZXKw/UJD0DZQboDI/AAAAAAAAAcU/TLf9LWYYx6U/s320/ilayarajah.jpg" /></a></div><br />
<br />
ராஜா சாரின் பாடல்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான இதயங்களில் பதிந்து போயிருப்பதில் ஆச்சர்யமில்லை. அதே போல அவரது பின்னணி இசைக்கும் மாபெரும் மகத்துவம் இருக்கிறது. பலபேர் அதை அவ்வளவு உன்னிப்பாக ரசித்திருக்க மாட்டார்கள். அல்லது அதற்கான சூழ்நிலை அமையாமல் இருந்திருக்கலாம். அவரது சில படங்களின் பின்னணி இசையின் போது ஒரு உதவி இயக்குனராக அருகிலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் அந்த அனுபவங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பரவசம் கொள்கிறேன்.<br />
<br />
நூறாவது நாள் படப்பிடிப்பு மொத்தமே 18 நாட்கள்தான் நடந்தது. டப்பிங், டபுள் பாசிட்டிவ் எல்லாம் ரெடி. ராஜா சாரின் பின்னணி இசை நாளுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் அவருக்கு வயிற்றில் எதோ சிறு பிரச்னை காரணமாக விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைக்கிறது. காரணம் ரிலீஸ் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர். வித்தியாச படமென்று தனக்கு பெயர் வரும் என்று காத்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஒரு குழப்பம் நிலவுகிறது. <br />
<br />
அதே குழப்பத்தோடு அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் போய் அவரை சந்திக்கிறோம் நானும் இயக்குனரும். ’’நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆக ஒரு வாரமாவது ஆகும். அதுனால உன் படத்துக்கு அமரை (கங்கை அமரன்) வைச்சு ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சுக்க’’ என்கிறார் ராஜா. இயக்குனர் முகத்தில் கவலை ரேகை. அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது. <br />
<br />
’’என்னய்யா யோசிக்கிற?’’ இது ராஜா<br />
<br />
’’இல்ல. உங்க ரீ-ரீக்கார்டிங்காகவே சில இடங்களை ஷூட் பண்ணியிருக்கேன். நீங்க பண்ணா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற மாதிரி இருக்கும்... ஆனா படத்தோட ரிலீஸ் தேதி வேற ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அதான் ஒரே குழப்பமா இருக்கு.....’’ –இது மணிவண்ணன் <br />
<br />
’’சரிய்யா ஒண்ணு பண்ணு. அதை வீடியோல காப்பி பண்ணிட்டு வா. இங்க ஒரு டிவி டெக் ஏற்பாடு பண்ணு. நான் படத்தை அதுல பாத்துட்டு நோட்ஸ் மட்டும் எழுதிக் கொடுக்கிறேன். அதை வச்சு அமர் ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சிடுவான்...’’ என்கிறார் ராஜா.<br />
<br />
இயக்குனர் முகத்தில் அப்படியொரு வெளிச்சம். அவருடைய ரீ-ரீக்கார்டிங் இல்லாமல் படம் தொய்ந்து போகும் என்ற வருத்தமுடன் வந்தவருக்கு ராஜா விருந்து வைத்தே அனுப்பி விட்டதாக நான் உணர்ந்தேன்.<br />
<br />
அடுத்த நாள் அவசர அவசரமாக முழுப்படமும் ஒரு வீடியோ கேஸட்டில் பதிவு செய்யப்படுகிறது. அப்போதெல்லாம் டிவிடி, சிடி, பென் டிரைவ் எல்லாம் கிடையாது. ஆஸ்பத்திரியில் ராஜா சாரின் அறையில் ஒரு டிவியும் வீடியோ டெக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சற்றே சோர்வாக இருந்தாலும் ராஜா சார் ஸ்டூடியோவில் இருக்கிற அதே சிரத்தையோடு முழுப்படத்தையும் பார்க்கிறார். படம் முடிந்ததும், மெல்ல சிரித்தபடியே, <br />
<br />
‘’நல்லா பண்ணியிருக்கியா... நாளைக்கு வந்து நோட்ஸ் வாங்கிட்டுப் போ’’ என்று வழியனுப்பி வைக்கிறார்.<br />
<br />
ராஜா சார் எழுதிய நோட்ஸ்களை அவரது இசைக் குழுவினர் வாசிக்கிறார்கள்- கங்கை அமரன் மேற்பார்வையில். அந்த இரண்டு நாட்களும் ராஜா சார்தான் அங்கே இல்லையே தவிர அவரது இசைக் கோடுகள், திரையில் பரபரவென படத்தின் பின்னணி இசையாக பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. பின்னணி இசையில்லாமல் தொழில் நிமித்தம் பலமுறை அந்தப் படத்தைப் பார்த்த எனக்கு, ஒவ்வொரு ரீலையும் ராஜா சாரின் பின்னணி இசையோடு பார்க்கிறபோது பிரமிப்பின் உச்சிக்கே போய் வந்தேன். <br />
<br />
படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களோடு நூறு நாளையும் தாண்டி ஓடியது. அந்தப் படத்தின் வெற்றியை முன்கூட்டியே உணர்ந்ததால்தான்தான் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கிருந்தே நோட்ஸ் எழுதிக் கொடுக்க அவருக்கு தோன்றி இருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட ஒரு படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் ஐம்பது மார்க் என்றால், ராஜா சார் ஒருவர் மட்டுமே தனி ஆளாக மீதி ஐம்பது மார்க்கை பகிர்ந்து கொண்ட படங்கள் அநேகம்.<br />
<br />
இதைப் போல இன்னும் சில படங்களின் பின்னணி இசைக் கோர்ப்பிலும் நான் இருந்திருக்கிறேன். ராஜா சார் முதல் நாள் படத்தைப் பார்ப்பார். அடுத்த நாள் அவரது சென்டிமெண்ட்டாக ஐந்தாவது ரீலுக்கு பின்னணி இசையை ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு நான்கு ரீல் வரை அது தொடரும். மூன்றாவது நாள் முழுப்படமும் ரெடியாகிவிடும்.<br />
<br />
திரையில் எந்தவித இசையும் இல்லாமல் ஒரு நாடகம் போல இருக்கும் காட்சிகள், அவரது இசையில் ஒவ்வொரு ரீலாக உயிர் பெறும் அதிசயம், அந்தக் கலைக்கூடத்தில் நிகழும். சம்பந்தப்பட்ட இயக்குனர்களே மிக ஆனந்தமாக ராஜா சாரின் பின்னணி இசை நிகழ்வை ஒருவித பெருமிதத்தோடும் பிரமிப்போடும் நிறைவான முகபாவங்களோடு ரசிப்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.<br />
<br />
இப்படி எத்தனையோ ஹிட் படங்களின் இசைக் கோர்ப்பை உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்….<br />
<br />
கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்……<br />
<br />
ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்…<br />
<br />
<br />
><br />
கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-51313150221548478952012-08-16T01:14:00.000-07:002012-08-16T01:14:17.799-07:00மரங்களே என் மகன்கள்....சத்தியமங்கலம் என்றதும் உங்களுக்குச் சட்டென நினைவுக்கு வருவது சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பனாகத்தான் இருக்கும். இனிமேல் அந்த பிம்பத்தைத் தயவுசெய்து அழித்துவிடுங்கள். இனி சத்தியமங்கலம் என்றதும் யாருக்கும் நினைவுக்கு வரப்போவது, இந்த அய்யாசாமியாகத்தான் இருக்கும். உலகம் முழுக்க அந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கிற காரியமொன்றை, இந்த மனுஷர் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் என்பதுதான், ‘மரங்களின் மகாத்மா’ விருதைப் பெற்றிருக்கும் இந்த அய்யாசாமியின் சாதனை!<br />
<br />
சத்தியமங்கலத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேட்டுவன்புதூர் கிராமம். மொத்தம் 250 வீடுகள். அதன் மக்கள் தொகையோ ஆயிரம் மட்டுமே. ஆனால், அதில் ‘ஆயிரத்தில் ஒருவரான’ அய்யாசாமிக்கு வயது 76. ஆனாலும் மனதளவில் இளைஞராகவே இருக்கிறார்.<br />
<br />
அப்படி என்ன இவர் பெரிதாகச் சாதித்து விட்டார்?<br />
<br />
அவர் சாதனையைப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைப் பார்த்து விடுவோமா?<br />
<br />
தன் ஐம்பத்தோரு வயது வரையிலும் அய்யாசாமிக்கு, ‘பள்ளிக்கூடம்’ என்கிற ஒற்றை வார்த்தையைக்கூட எழுதவோ படிக்கவோ தெரியாது. பார்த்து வந்த தொழில் ஆடுமேய்ப்பதுதான். ஒருகாலத்தில் சொந்தமாக நாற்பது ஆடுகள் அவரிடம் இருந்தன. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அவரது மகளின் திருமணச் செலவுகளுக்காக அவை அனைத்தையுமே விற்க வேண்டிய சூழ்நிலை. இப்போது அய்யாசாமி ஒரு விவசாயக்கூலி. பகலில் சூரியனும் இரவில் மண்ணெண்ணை விளக்கும் மட்டுமே, வெளிச்சம் தரும் ஒரே ஒரு சின்னக் குடிசை வீடுதான் இப்போதைக்கு மிச்சம். மிகச் சமீபத்தில்தான், மழைத்தொல்லை காரணமாக, சுமார் 100 ஓடுகளைக் கொண்ட ஓட்டுவீடாக அது உருமாறியிருக்கிறது. கூடவே அவரது துணைவியான 65 வயது கருப்பாத்தா. <br />
பத்துவரிப் பாராவில் முடிந்து போகிறது அய்யாசாமியின் பயோடேட்டா. ஆனால் அவரது சக்திமிக்க சாதனை, நாளைய சரித்திரத்தில் இடம்பெறப் போவது உறுதி. அதற்கு முன்னே, அவரது ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போமா?<br />
அது 1984ம் வருடம். <br />
<br />
அப்போது அய்யாசாமிக்கு ஐம்பத்தோரு வயது. படிக்கத் தெரியாது என்றாலும், டீக்கடைக்குப் போய் அன்றைய நாளிதழை அடுத்தவர்களைவிட்டு வாசிக்க வைத்து, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ‘ஆடுமேய்க்கிற ஆள்தானே’ என்று அந்தப் ‘பெருசை’ யாரும் அலட்சியம் செய்யாமல், அந்த ஊர் இளைஞர்கள் அவருக்குச் செய்திகளை வாசித்துக் காட்டியது மட்டுமில்லாமல், மெல்ல மெல்ல அவருக்குப் படிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நாளடைவில், பேப்பரில் வரும் செய்திகளை எழுத்துக் கூட்டிப் படித்துப் புரிந்து கொள்கிற அளவுக்குத் தேறிவிட்டார்.<br />
இரவு நேரங்களில் பக்கத்து வீட்டு நெசவுத் தொழிலாளியான ரங்கசாமியின் ரேடியோவில், கோவை வானொலி ஒலிபரப்புகிற செய்தி மற்றும் நிகழ்ச்சிகளைக் கேட்பது வாடிக்கை. செய்தி கேட்காமல் தூங்கப் போனதே இல்லை. அப்படியொருநாள் அவர் கேட்ட நிகழ்ச்சிதான், அவர் மனதில் ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது. <br />
<br />
“நமது நாட்டில் நீர்வளம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது. மழை பொய்த்துப் போக ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் விவசாயம் என்பதும், பயிர் அறுவடை என்பதும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. பூமி, நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போவதால், மரங்கள் அதிகமான அளவில் தேவைப்படுகின்றன. அவைகளால்தான் நமக்கு மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். ஆகவே நாம் அனைவரும் ஒரு இந்தியராக நமது நாட்டை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ஆளுக்கு ஒரு மரமாவது வளர்ப்பதை நம் கடமைகளில் ஒன்று என்பதை உறுதிமொழியாக ஏற்றுக் கொள்வோம்” என்பதே அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட உரை. (சுமார் 25 வருடங்களுக்குமுன், அந்த வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பெயர் முருகானந்தம் என்பதைக்கூட அய்யாசாமி இந்த வயதிலும் நினைவுகூர்கிறார்!) <br />
<br />
அந்த நிமிடமே தன் மனதிற்குள் மரம் வளர்க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட அய்யாசாமி, அடுத்த நாள் காலையில் செய்த முதல் விஷயம், கிராமத்தைச் சுற்றியிருக்கும் வேப்பமரங்களின் கீழ் சிதறிக் கிடக்கும் அதன் விதைகளையும் சேகரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான - இவர் ஆடுமேய்க்கும் இடமான - காட்டோடையில் ஆரம்பித்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மாதேஸ்வரன் மலை அடிவாரம் வரை, இருமருங்கிலும் தக்க இடைவெளிவிட்டு விதைத்திருக்கிறார். நாளடைவில், அந்தப் புறம்போக்கு நிலத்தில் இவர் விதைத்தவைகளில் செடியாக வளர்ந்து நின்றவைகளின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தொட்டிருக்கிறது! <br />
<br />
அவைகளுக்குப் பொறுமையாக முள்வேலியிட்டு ஆடு, மாடுகள் மேய்ந்து விடாதபடி மிகக் கவனமாகப் பாதுகாத்து வளர்த்திருக்கிறார் அய்யாசாமி. தான் வளர்க்கும் ஆடுகளின் எச்சங்களையே சேகரித்து, அந்தச் செடிகளுக்கு உரமாகவும் இட்டு வந்திருக்கிறார். கண்முன்னே அவைகள் மளமளவென்று வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அய்யாசாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. சில வருடங்களில் அந்தச் செடிகள் மரங்களாக மாறியிருக்கின்றன. தனக்கு ஒரு ஆண்குழந்தை இல்லையே என்கிற வருத்தம் நீண்ட நாள் அய்யாசாமியின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தான் விதையிட்டு உரமிட்டு வளர்த்த மரங்களையே தனது மகன்களாகப் பாவித்து, மேலும் கவனமாக அவைகளைப் பராமரித்திருக்கிறார். <br />
இன்று அத்தனை மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து, அந்த வேட்டுவன் புதூரையே ஒரு பசுஞ்சோலையாக மாற்றி அமைத்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன அந்த மரங்கள்.<br />
<br />
“இந்த உலகத்துல ஒரு அப்பனுக்கு ஆம்பளப் புள்ளைங்க ஒண்ணுலேர்ந்து பத்துப் பேரு இருப்பாங்க, இல்லீங்களா தம்பீ? ஆனா மூவாயிரம் ஆம்புளப் புள்ளைங்க எனக்குச் சொந்த மகன்களா, எங்கண்ணு முன்னாடி கம்பீரமா வளர்ந்து நிக்கிறானுங்க.... இதவிட எனக்கு வேற சொத்து சொகம் எதுவும் வேணாஞ்சாமி..... இது ஒண்ணே எனக்குப் போதுங்கண்ணு... “ என்று கோவைத் தமிழில் பேசி நம்மை நெகிழ வைக்கிறார் அய்யாசாமி!<br />
உண்மைதான். இந்த அப்பாவி அய்யாசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?<br />
<br />
அவர் குடியிருக்கும் ஓட்டு வீடு; ஈரோடு ஜூனியர் சேம்பியன் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் எம்.எஸ்.உதயமூர்த்தியால் வழங்கப்பட்ட ‘மரங்களின் மகாத்மா’ என்கிற பட்டத்தோடு கூடிய ஒரு ஷீல்டு; ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியிலிருந்து கொடுத்த கண்ணாடி பிரேமிட்ட ஒரு வாழ்த்து மடல். இவரது செய்தி ஆர்வத்திற்குப் பரிசாக, குழந்தைசாமி என்கிற உள்ளூர் நண்பரால் வழங்கப்பட்ட ஒரு சிறிய டிரான்சிஸ்டர். கூடவே சில நிகழ்ச்சிகளில் அவருக்குப் போர்த்தப்பட்ட எட்டு சால்வைகள். அந்தச் சால்வைகளைப் பற்றி, அய்யாசாமி மிகவும் விட்டேத்தியாகச் சொல்கிறார், <br />
“அந்தப் பட்டுத் துணிங்கதான் எனக்கும் எம்பொஞ்சாதிக்கும் குளிர்காலத்தில போத்திக்க ஒபயோகமா இருக்குதுங்க தம்பி...” <br />
<br />
காந்தியின் நினைவாக தன் வாழ்நாளில் சட்டையே அணியாத அய்யாசாமியின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? இரண்டு வருடங்களுக்கு முன் அவர் வெளியூர் போயிருந்தபோது, சில சமூக விரோதிகள், அவர் மகன்களாக கருதி வளர்த்த சில மரங்களை இரவோடு இரவாக, வேரோடு வெட்டி எடுத்துச் சென்றதுதான். ஊருக்குத் திரும்பிய அவர் துடித்துப் போய் ஈரோடு கலெக்டரிடம் ஓடோடிப் போய் புகார் மனு அளித்திருக்கிறார். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லையென ஆதங்கப்படும் அய்யாசாமி, அந்த புகார் மனுவிற்கான ரசீதைப் பத்திரமாக வைத்திருந்து நம்மிடமும் ஆதங்கமாகக் காட்டுகிறார். ஆனாலும் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவராக, <br />
“ஆயிரம் சந்தன மரங்களை வெட்டிச் சாய்ச்ச வீரப்பனைதான் இந்தப் பேப்பர்காரங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுனாங்க, டி.வி. பொட்டிக்காரங்களும் கதை கதையா சொல்லிப் படமா எடுத்துக் காட்டுனாங்க. இதுல நம்ம சொல்றது எப்படிங்க சாமி எடுபடும்?”<br />
<br />
ஒரு பசுமைப் புரட்சியையே நிகழ்த்தியிருக்கும் அய்யாசாமியின் இந்த ஆதங்கமிக்கக் கேள்வியில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் இவர் தன் கடைசி ஆசையாக, ‘நான் இறந்துவிட்டால் சுடுகாட்டில் புதைத்துவிடக் கூடாது. என் மூவாயிரம் மகன்களுக்கு நடுவே ஒரு இடத்தில் குழிதோண்டித்தான் புதைக்க வேண்டும்’ என்பதுதானாம். <br />
<br />
சமீபகாலமாக, அய்யாசாமியை வறுமை வலுவிழந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் வந்து கொண்டிருந்த முதியோர் உதவித்தொகையான நானூறு ரூபாய்கூட, கடந்த ஐந்து மாதங்களாக வரவில்லையாம். அதற்கு மணியகாரரிடமும், தாசில்தாரிடமும் தினசரி நடந்து கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்லும் அய்யாசாமி, அந்தக் கஷ்ட ஜீவனத்திலும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர், கோவை வானொலி மூலம், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வாசகங்களை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு, நம் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்: <br />
<br />
“எதோ என்னால முடிஞ்சது, எப்படியோ கஷ்டப்பட்டு மூவாயிரம் மரங்கள தனி ஆளா வளர்த்துட்டேன். ஆனா நீங்க எல்லாரும், இந்த நாட்டுல எதாவது ஒரு இடத்துலயாவது ஒரே ஒரு மரம் வளர்ப்போம்னு உறுதிமொழி எடுத்துக்குவீங்களா?”<br />
<br />
அய்யாசாமியின் இந்த ‘ஒரே ஒரு’ கேள்விக்கு நம்மில் எத்தனை பேரிடம் ‘ஆம்’ என்கிற பதில் இருக்கிறது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-mutdQZZWWRQ/UCyrcm-g55I/AAAAAAAAAbI/URfTfn6hBBs/s1600/ayya%2B5.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="247" src="http://1.bp.blogspot.com/-mutdQZZWWRQ/UCyrcm-g55I/AAAAAAAAAbI/URfTfn6hBBs/s320/ayya%2B5.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-SwU5awSy3Ys/UCyrzKpH35I/AAAAAAAAAbU/c1rAG1Uv3Ag/s1600/ayya%2B5.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="247" src="http://2.bp.blogspot.com/-SwU5awSy3Ys/UCyrzKpH35I/AAAAAAAAAbU/c1rAG1Uv3Ag/s320/ayya%2B5.jpg" /></a></div><br />
கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-10744999732010808092012-06-22T00:37:00.000-07:002012-06-22T00:37:25.366-07:00இந்திய சினிமாவுக்கு வயசு நூறு.இது குறித்து இந்தியாவில் சினிமாவின் பயணம் குறித்து, ஏழாவது மனிதன் படத்தின் இயக்குனரும் தற்போது பிரசாத் திரைப்படக் கல்லூரியின் முதல்வருமான ஹரிஹரன் அவர்கள் புதிய தலைமுறைக்காக எனக்கு அளித்த பேட்டி இது. அவரது வெளிப்படையான துணிச்சலான பல கருத்துக்களுக்காக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.<br />
<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-zG9Bxn4bPFA/T-QeYkQjbgI/AAAAAAAAAag/vwDz90mflwE/s1600/Hari%2BPage%2B1.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="217" width="320" src="http://4.bp.blogspot.com/-zG9Bxn4bPFA/T-QeYkQjbgI/AAAAAAAAAag/vwDz90mflwE/s320/Hari%2BPage%2B1.jpg" /></a><br />
<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-HcrvnNIXf3s/T-QewpvPkaI/AAAAAAAAAa4/1e6ewojEcaQ/s1600/Hari%2BPage%2B2.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="236" src="http://4.bp.blogspot.com/-HcrvnNIXf3s/T-QewpvPkaI/AAAAAAAAAa4/1e6ewojEcaQ/s320/Hari%2BPage%2B2.jpg" /></a><br />
<br />
<br />
அரசாங்கத்திற்கு சினிமா மீது காழ்ப்புணர்ச்சி<br />
<br />
<br />
-கே.ஹரிஹரன் <br />
<br />
<br />
ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் சினிமா வருவதற்கு முன்னரே கார், விமானம், வானுயர்ந்த கட்டிடங்கள், டிராஃபிக் ஜாம், மின்சார விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்கள், ஆட்டோமேடிக் எலிவேட்டர்ஸ், ஏன் கொக்கோகோலா கூட அங்கே வந்தாயிற்று. ஆனால் இந்தியாவிற்குள் சினிமா வரும்போது மின்சாரமே கிடையாது. பங்களாக்கள், கார்கள், விமானம் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் சினிமாதான் முதன்முதலில் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. புதுமை என்கிற விஷயத்தையே சினிமா மூலம்தான் நாம் அறிந்து கொண்டோம். அதன்பிறகுதான் அதில் காட்டப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நேரில் பார்த்தோம்.<br />
<br />
<br />
இந்தியாவைப் பொருத்தவரை ஸ்கூல், காலேஜ், யுனிவர்சிட்டி போன்றவைகள் சொல்லித்தர முடியாத பல விஷயங்களை அவைகளுக்கு முன்பாகவே சினிமாதான் நமக்குக் கற்றுக் கொடுத்தது. அப்போது இங்கே ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு பியானோ, சாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் படங்களில் ராஜ்கபூரும், சிவாஜி கணேசனும் அதை அருமையாக வாசிப்பார்கள். இப்படியெல்லாம் வாத்திய கருவிகள் இருக்கின்றன என்பதை அப்போதே சினிமாதான் சொல்லி பிரமிப்பூட்டியது. முதலாளித்துவத்தை இங்கே சினிமாதான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. பலவிதமான பொருட்களின் நுகர்வுமயத்தையும் அதுதான் நமக்கு உணர்த்தியது. உணவு, உடை, பாடல் என்று பல துறைகளிலும் புதுப்புது விஷயங்களை சினிமாதான் இந்தியாவிற்கே காட்சிப்படுத்தியது.<br />
<br />
<br />
இருபதாம் நூற்றாண்டின் கவிதை என்பது சினிமா பாடல்கள்தானே? வேறு எது இங்கே கவிதை என்று அறியப்பட்டது? பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படாத கவிதைகளை சினிமாவில் நாம் கேட்டோம். பாடங்களில் புராணங்களை படித்து மனப்பாடம் செய்ய முடியாத பல விஷயங்களை இந்தச் சினிமாதான் மிகச் சுலபமாக நம் மனதில் பதிய வைத்தது. புராணங்களைத் தாண்டி சரித்திரம் மற்றும் சமூகப் படங்களின் தயாரிப்பில் இந்திய சினிமா பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. <br />
அதே புராணங்களில் இருந்த நல்ல கருத்துகள் எல்லாமே திரும்ப எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் சொல்லப்பட்டன. முருகர், ராமர் போன்ற பாத்திரங்கள் அவர்களின் சமூகப் படங்களிலும் பிரதிபலித்தன. மகாபாரதப் பின்னணி, ரஜினி நடித்த தளபதி வரை நீண்டது. திரும்பத் திரும்ப இந்த மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தையும் தீயவர்களின் முடிவையும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன இந்திய சினிமாக்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகளையும் சினிமா ஆற்றி வந்திருக்கிறது. தனியொரு மனிதனுக்கு லட்சியம், கொள்கை எல்லாம் வேண்டும் என்பதை இங்கே சினிமாதான் முதன்முதலாக அறிவுறுத்தியது. அரசியல், பொருளாதாராம், கல்வி என் பல முக்கிய நடப்புகள் குறித்த விமர்சனங்களை சினிமாதான் முதன் முதலாக துணிச்சலாக இங்கே வெளிப்படுத்தியது. வேறு எந்த கலை சார்ந்த துறையினரும் அதில் முழுமையாகப் பங்கெடுக்கவே இல்லை. சமுதாயத்தில் நடக்கும் பல தவறுகளை சினிமாக்கள் சுட்டிக் காட்டின. அது இந்திய சினிமாவிற்கு கிடைத்த வெற்றி.<br />
<br />
<br />
ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த வெற்றிதான் இந்திய அரசாங்கத்திற்கு சினிமா மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் விட்டது. சினிமா என்றாலே மத்திய அரசு வெறுப்பதற்கு சினிமா மீதான அவர்களின் தவறான பார்வைதான் காரணம். எல்.வி.பிரசாத், ஏவி மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி போன்றவர்கள் எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல் சுலபமாக பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவில் நம்மையே விமர்சிக்கிறார்களே என்று ஆரம்பித்த அர்த்தமில்லாத கோபம், இந்த அரசாங்கத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்றுவரை தொடர்கிறது. 1953லேயே ராஜ்ய சபா மெம்பராக இருந்த மிஸஸ் முன்ஸி என்பவர் சினிமாத்துறை ஒரு அபத்தக் குப்பையாக இருக்கிறது; ஆபாசமாக இருக்கிறது; இதைவிட மட்டமான மீடியம் கிடையாது, எனவே அதை உடனே தடை செய்ய வேண்டும் என்று சபையில் குரல் கொடுக்கிறார். அதே வருடத்தில் கேஸ்கர் என்ற ஆல் இண்டியா ரேடியோ தலைவராக இருந்தவர், சினிமா பாடல்களை ரேடியோவில் ஒலிபரப்பாவதை மூன்று வருடங்களுக்கு தடையே செய்திருக்கிறார். <br />
<br />
<br />
ஆனாலும் இத்தனை தடைகளையும் தாண்டி, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக இருப்பதற்கு சினிமா தன் முழு பங்களிப்பையும் செய்து வந்திருக்கிறது. இளைஞர்கள் மூலம் பல எதிர்ப்புகுரல்களை பதிவு செய்ய அது தூண்டுகோலாக இருந்திருக்கிறது. பல அரசியல் தலைவர்களை இந்த சினிமா உருவாக்கிறது <br />
<br />
<br />
இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்திய சினிமாவிற்கு சென்சார் என்கிற விஷயம்தான் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. சினிமாவிற்குப் பின்னர் பிரபலமாகி இருக்கின்ற தினசரிகளுக்கு, வார மாத இதழ்களுக்கு, டிவி சேனல்களுக்கு, இண்டர் நெட்டுக்கு இங்கே சென்சார் கிடையாது. ஆனால் சினிமாவிற்கு மட்டும் சென்சார் என்பது ஒரு சாபக்கேடுதான். சினிமாவில் சொல்லப்படாத, சொல்ல முடியாத பல விஷயங்களை இன்றைக்கு மற்ற மீடியாக்களில் இன்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். பிரிட்டிஷ்காரன் ஆண்டபோது சென்சார் இருந்ததில் நியாயம் இருக்கிறது. இந்த சுதந்திர நாட்டில் சினிமாவிற்கு மட்டும் எதற்கு சென்சார்? <br />
<br />
<br />
அதே போல இன்னொரு கருத்தையும் இங்கே நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். சமீபத்தில் நான் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பலதரப்பட்ட டெக்னாலஜி படிப்புகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. 1953ல் ஆரம்பிக்கப்பட்ட அங்கே, சினிமா பற்றிய படிப்பு மட்டும் இன்னும் துவங்கப்படாமலே இருக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை அங்கே சொல்லித் தரலாமே? சினிமா டெக்னிக்கை மட்டும் ஏன் அங்கே ஒதுக்க வேண்டும்?. <br />
இன்னும் சொல்லப் போனால் இந்த சினிமா கல்வியை இங்கே பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கே செய்யுள், விளையாட்டு, ஓவியம் கற்றுத் தரப்படுகிறது. ஏன் சினிமா மொழியை கற்றுத்தர கூடாது? குளோசப், லாங் ஷாட், ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்கிற ஸ்டோரி போர்டு வழிமுறைகளை அங்கிருந்தே ஆரம்பிக்கலாமே? மாணவர்களிடத்தில் இதற்கு உற்சாகமான வரவேற்பு நிச்சயம் இருக்கும். காரணம் அவர்களின் பள்ளி வாழ்க்கையின் பாதி நாட்கள் சினிமாவில்தான் கழிகிறது. அதைப் பற்றிய தொழில் நுட்பத்தை அவன் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? <br />
<br />
<br />
ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார். உண்மையாலுமே இளைஞர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் சிகரெட்டை தடை செய்யுங்கள். அந்த அதிகாரம் இல்லாதபோது சினிமாவைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாதீர்கள்.<br />
இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடுவதால் யாருக்கு என்ன லாபம்? சினிமா கலைஞர்களின் புகழ்பாடி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துதான் இந்த நூற்றாண்டின் நோக்கமா? மக்கள் இந்த சினிமாவை ஏற்கனவே கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்து போனார்கள். அதை எங்கேயே எடுத்துச் சென்று விட்டார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைக்காத வரவேற்பா? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா? கேரளாவில் பிரேம் நஸீர் 38 வருடங்களில் 610 படங்களில் நடித்திருக்கிறார். வருடத்திற்குச் சராசரியாக 12 படங்கள். அதாவது மாதம் ஒரு படம் என்கிற விகிதத்தில் அவரது படம் வந்து கொண்டே இருந்திருக்கிறது. பிரேம் நஸீர் என்பவரது ஒரே முகத்தை 38 வருடங்களாக மூன்று தலைமுறையினர் சலிக்காமல் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரது திறமை என்ன சொல்வது? இப்படி வடக்கே பலரும் இந்திய சினிமாவிற்கு எத்தனையோ சாதனைகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். <br />
இதுமாதிரி மிகச் சிறந்த எத்தனையோ கலைஞர்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கெளரவிக்காமல் இருந்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் என்ற பெயரில் சூதாட்டத்தில் பங்குபெறும், தனியார் பொருட்களை விற்பனை செய்ய, தன்னைத்தானே அந்த நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் விற்றுக் கொள்ளும், சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுத்து பாரத ரத்னா விருதையும் கொடுக்கக் தயாராக இருக்கிறது, இந்த அரசாங்கம். அந்த வகையில் சினிமா கலைஞர்கள் என்ற முறையில் ரஜினியையும் கமலையும் நான் மனதார பாராட்டுகிறேன். எந்தவொரு பொருட்களுக்கும் இதுவரைக்கும் விளம்பரம் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்ளவே இல்லை. ‘நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் ஆடியன்ஸ் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை; பொருட்களுக்காக அதனை வீணடிக்க விரும்பவில்லை’ என்கிற அவர்களின் கொள்கையைப் பாராட்டியே தீர வேண்டும். <br />
<br />
<br />
இந்திய சினிமாவிற்கு இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு நேரமாகவே இந்த நூற்றாண்டை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான குரலை இங்கே நான் பதிவு செய்து விட்டேன். அது நிச்சயம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையும் இந்திய சினிமா எனக்குக் கொடுத்திருக்கிறது. <br />
. சந்திப்பு: கல்யாண் குமார்<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-25192013751883633432012-06-16T01:24:00.000-07:002012-06-16T01:55:17.188-07:00காந்திக்கு மரியாதைகாந்தி – இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தோன்றுவதெல்லாம் அவர் நமது தேசத்தந்தை; நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடியவர்; அக்டோபர் இரண்டு அவர் பிறந்த நாள். அன்றைக்கு அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும் என்பது மட்டும்தான். ஆனால் அந்த மகானைப் பற்றிய பலரும் அறியாத செய்திகளோடு 120 நாடுகளுக்கும் மேலாக அவருக்கு கெளரவம் செய்யுமுகமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளின் சேகரிப்பையும் தனியொரு மனிதனாகச் செய்திருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழில்நான் எழுதியிருந்தேன்.
<a href="http://3.bp.blogspot.com/-hYFciHah-h0/T9xBCXo7y3I/AAAAAAAAAZs/kw9TGYMMtKQ/s1600/28.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="238" src="http://3.bp.blogspot.com/-hYFciHah-h0/T9xBCXo7y3I/AAAAAAAAAZs/kw9TGYMMtKQ/s320/28.jpg" /></a>
<a href="http://3.bp.blogspot.com/-xMM-Wj1zXWk/T9xBKb2z6mI/AAAAAAAAAZ4/XSaqPdT6p10/s1600/29.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="238" src="http://3.bp.blogspot.com/-xMM-Wj1zXWk/T9xBKb2z6mI/AAAAAAAAAZ4/XSaqPdT6p10/s320/29.jpg" /></a>
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இன்றும் அதே காந்தி பற்றிய சிந்தனைகளோடு, பள்ளிக் குழந்தைகளிடையே காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ராஜேஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ’காந்தி வேர்ல்டு பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி காந்தி குறித்த கண்காட்சிகளை தமிழகம் முழுக்க நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
சென்ற வாரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி குறித்தான கண்காட்சியைத் துவக்கி வைத்ததோடு, ராஜேஷையும் அவரது அறக்கட்டளையையும் மனம்விட்டு வாழ்த்திப் பேசியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம். பள்ளிக்குழந்தைகளுகாக துவக்கப்பட்ட இந்த காந்தி குறித்தான கண்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டு குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீர் விசிட் அடித்து கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள்.
<a href="http://4.bp.blogspot.com/-LYHLX2m2rB4/T9xBTapY42I/AAAAAAAAAaE/dbx3wYNoLB0/s1600/DSC_0213.JPG" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="213" width="320" src="http://4.bp.blogspot.com/-LYHLX2m2rB4/T9xBTapY42I/AAAAAAAAAaE/dbx3wYNoLB0/s320/DSC_0213.JPG" /></a>
அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த நடிகர், சமூக சிந்தனையாளர் நண்பர் விவேக் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
<a href="http://1.bp.blogspot.com/-oDUBrz-uv14/T9xBksH4XwI/AAAAAAAAAaQ/0cqWeUVfUqY/s1600/IMG_1190.JPG" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="214" width="320" src="http://1.bp.blogspot.com/-oDUBrz-uv14/T9xBksH4XwI/AAAAAAAAAaQ/0cqWeUVfUqY/s320/IMG_1190.JPG" /></a>
ராஜேஷ் அவர்களின் இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து காந்தியின் புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரோடு இணைந்து செயலாற்றும் அந்த அறக்கட்டளையின் டிரஸ்ட்டி திரு. ஜி.ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கும் ராஜேஷின் துணைவியாரும் அதன் மானேஜிங் டிரஸ்ட்டியுமான திருமதி. ஆர்.விஜயலஷ்மி மற்றும் ராஜேஷிற்கு உதவிபுரியும் நண்பர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்கிறேன்.
நீங்களும் வாழ்த்தலாமே?
ராஜேஷ் தொடர்பு எண்: 9444019030 / www.gandhiworld.inகல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-72830383635336600042012-02-29T22:17:00.003-08:002012-02-29T22:21:42.880-08:00ராஜா ராஜாதான்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-exY5hWXqS04/T08Urta7UjI/AAAAAAAAAYA/DqMFGyG9da8/s1600/raja%2Bwith%2Bme.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 237px;" src="http://3.bp.blogspot.com/-exY5hWXqS04/T08Urta7UjI/AAAAAAAAAYA/DqMFGyG9da8/s320/raja%2Bwith%2Bme.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5714809193315914290" /></a><br /><br /><br /> ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன். <br /><br /> பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும். <br /> <br /> ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார். <br /> <br /> பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள். <br /><br /> வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும். <br /><br /> வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம். <br /><br /> பின்னர் ரிதம் செக்ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும். <br /><br /> டிபன் பிரேக். <br /><br /> அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது. <br />அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார். <br />இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்.... <br /><br /> காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....<br /> <br /> நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......<br /><br /> ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-67646505599028901732012-02-06T02:42:00.000-08:002012-02-06T02:52:28.823-08:00தொலைந்து போன மகளையும் உடைந்து போன தாயையும் ஒன்று சேர வைத்த என் கட்டுரை...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-9FLrWqjbW4g/Ty-wzXeyExI/AAAAAAAAAX0/YXN-7-_3nWI/s1600/Jerina%2Bbegam-2.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-9FLrWqjbW4g/Ty-wzXeyExI/AAAAAAAAAX0/YXN-7-_3nWI/s320/Jerina%2Bbegam-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705973649424651026" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-VNR_LY_gt0s/Ty-wpE3xkJI/AAAAAAAAAXo/DCfnHV5XCiw/s1600/Jerina%2Bbegam-1.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-VNR_LY_gt0s/Ty-wpE3xkJI/AAAAAAAAAXo/DCfnHV5XCiw/s320/Jerina%2Bbegam-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705973472630509714" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-KvXM2ASeSKs/Ty-wkGNh8FI/AAAAAAAAAXc/m1hI2R3BfUM/s1600/Jerina%2Bbegam-4.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-KvXM2ASeSKs/Ty-wkGNh8FI/AAAAAAAAAXc/m1hI2R3BfUM/s320/Jerina%2Bbegam-4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705973387090849874" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-i1sk1mt6XzA/Ty-wdZLPzhI/AAAAAAAAAXQ/B_C2nm8FqZ4/s1600/Jerina%2Bbegam-3.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-i1sk1mt6XzA/Ty-wdZLPzhI/AAAAAAAAAXQ/B_C2nm8FqZ4/s320/Jerina%2Bbegam-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705973271922462226" /></a>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-8507212527207049382012-01-20T05:04:00.000-08:002012-01-20T05:08:07.237-08:00நான் ரசித்த நாடகம்.... ’கீசகவதம்’(கொஞ்சம் லேட்டான விமர்சனம்)<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ksUMcxDnRKE/Txlmg9z9QEI/AAAAAAAAAWU/K7H8HCdHMs0/s1600/kichaga%2Bvadham.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-ksUMcxDnRKE/Txlmg9z9QEI/AAAAAAAAAWU/K7H8HCdHMs0/s320/kichaga%2Bvadham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699699519948406850" /></a><br /><br />புராணக் கதைகளை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு, அவற்றில் சில பகுதிகளை நவீன நாடகமாக்கி மேடையேற்றுவதில் வெற்றி கண்டவர், கூத்துப்பட்டறை நா.முத்துசாமி. அவரது குழுவில் பயிற்சி பெற்று தற்போது டி விருக்ஷா என்ற குழுவை நடத்தி வரும் ஸ்ரீதேவி சமீபத்தில் அரங்கேற்றிய நாடகம் ’கீசக வதம்’. <br /><br />நா.முத்துசாமி எழுதிய நாடக வடிவத்திற்கு முழு வடிவம் கொடுத்து அரங்கப் பொருட்களில் ஒன்றான மாமரம் ஒன்றை மையமாகப் பயன்படுத்தி நவீன நாடக அம்சங்களையும் சேர்த்து, முழுக் கதையையும் நகர்த்திச் சென்ற விதம் புதுமை. ஒரு வருடத்தில் நிகழக்கூடிய கதை சம்பவங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி பார்வையாளர்களை அசத்திய நடிகர்களிடம் கடுமையான பயிற்சியும், உழைப்பும் தெரிந்தது.<br /><br />பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் கடைசி ஆண்டில் அஞ்ஞாத வாசம் எனப்படும் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மைத்துனன கீசகன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான். <br /><br />பாஞ்சாலியாக நடித்த வைசாலி தெலுங்குப் பெண். அவருக்கு தமிழில் நீளமான வசனங்களைக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் ஸ்ரீதேவியின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். தருமராக வந்த பிரதீப், கீசகனாக வந்த ராம்குமார், கீசகனின் சகோதரி மற்றும் பீமனாக இருவேறு வேடங்களில் வந்த சுல்தான் போன்றவர்கள், ஏற்கனவே நாடகத் துறையிலிருந்து திரையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களைப் போல் (பசுபதி, விமல், வித்தார்த், விஜய சேதுபதி) எதிர்காலத்தில் திரை நட்சத்திரங்களாக ஜொலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. <br /><br />தருமராக வந்த பிரதீப் கலை சார்ந்த பெண்களை தொடர்ந்து இந்தச் சமூகம் ஏன் கேவலமாகவே பார்க்கிறது என்பதைக் கண்டித்துப் பாடும் பாடல், உண்மை கலந்த வேதனை.கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-4127365709294204032011-03-14T22:35:00.000-07:002011-03-23T19:43:43.975-07:00காணாமல் போன கனவு.... தனுஷ்கோடி - ஒரு நேரடி ரிப்போர்ட்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2X0ePUSs_pI/TX776WYvTvI/AAAAAAAAAVo/sHFdE4aLlpk/s1600/23%2Bwrapper.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-2X0ePUSs_pI/TX776WYvTvI/AAAAAAAAAVo/sHFdE4aLlpk/s320/23%2Bwrapper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584177567846321906" /></a><br /><span style="font-weight:bold;"><br /><br />தனுஷ்கோடியின் அவல நிலைகுறித்து நான் எழுதிய நேரடி ரிப்போர்ட் இது - புதிய தலைமுறை வார இதழில் கவர் ஸ்டோரியாக சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது...<br /><br /><span style="font-style:italic;"></span></span><br /><br />‘பாழடைந்து கிடக்கிறது; ஆனாலும் பயங்கர அழகு.. ஆள் நடமாட்டம் இல்லை.ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது. திகில். ஆனால் பரவசம். எல்லாவற்றையும் விட இந்தியாவின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே ‘ஜிவ்’வென்று இருக்கிறது.’<br /><br />-சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்து போன வெள்ளைக்காரர் ஒருவர் எழுதிய வரிகள் இவை. இன்றைக்கும் அந்தக் கடலோர நகருக்குப் பொருந்தும் வரிகள்தான். ஆனால் அந்த அழகிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது ஒரு சோகம். அது-<br /><br />47 வருடங்களாக அரசுகளால் கைவிடப்பட்டு அநாதையாய் நிற்கும் சோகம்.<br /><br />ஒரு காலத்தில் தினம் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம் அது. இராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் இணையும் புள்ளி. <br />இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஊர், 47 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவில் கடலின் சீற்றத்தால் காணாமல் போனது. 1964 டிசம்பர் 22, செவ்வாய் இரவு வீசிய பெரும் புயல், தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டதோடு அந்தக் கிராமத்தையே உருத்தெரியாமல் ஆக்கிப் போனது. அன்று, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு என 500 மீனவக் குடும்பங்கள் உட்பட பல்வேறு இனத்தவருமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர் எனப் பரபரப்பாக இயங்கிய தனுஷ்கோடி, இன்று ‘வாழத் தகுதியற்ற பகுதி’ <br /><br />சரி புயல் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகவே அது ஆகிவிட்ட்தாகவே இருக்கட்டும். அப்படி ஆகிவிட்டால் அதைப் புதுப்பிக்கும் கடமை அரசுக்குக் கிடையாதா? 2006ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆனால், 1964ல் கிட்டத்தட்ட சுனாமி போல ராட்சத அலைகளால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி மட்டும் இன்னும் ஒரு சாலை கூட சரி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்? <br /><br />இதற்கு தெளிவாக விடை சொல்பவர்கள் யாரும் இல்லை. நிறைய ஊகங்கள்தான் விடையாகத் தரப்படுகின்றன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கை 15 கீ.மீ.தான். கிழக்குக் கடற்கரையோரம் இலங்கைக்கு நெருக்கமாக உள்ள வேதாரண்யம், கோடிக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டின் நிலப்பகுதியோடு இணைந்த பகுதியாக உள்ளன. அங்கே பாதுகாப்பை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், கண்காணிப்பதும் அதிகம் சிரமான விஷய்ம் அல்ல. ஆனால் தனுஷ்கோடி தீவு. இலங்கையில் உள்நாட்டுப் போர் இருந்த சூழலில் தனுஷ்கோடி மீண்டும் உயிர்த்தெழுவதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசுகள் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. <br /><br />இது குறித்துப் பேச இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினோம். தனுஷ்கோடியின் மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்றதுமே, "அது குறித்த முந்தைய தகவல்களை சேகரித்து விட்டு அழைக்கிறோம்" என்று அவரது உதவியாளர் நமது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால், அவரிடமிருந்து அழைப்பு வராததால் மீண்டும் நாமே தொடர்பு கொண்டபோதும் விரைவில் அழைப்பதாகவே பதில் வந்தது. <br /><br />அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, "நான் இப்போது சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். இராமேஸ்வரத்தை பெருநகரமாக ஆக்கச் சொல்லி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கும் வழி பிறக்கும்" என்றார் சுருக்கமாக <br /><br />ஆனால் இப்போது உள்ள ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடரும் முடிந்து விட்ட்து. இனித் தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு குரல் எழுந்தால்தான் உண்டு.<br />"பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தனுஷ்கோடிக்கே வரவழைத்து, அதன் அவலத்தைப் பார்வையிட வைத்தேன். அவரும் ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து, தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து அமைக்க எவ்வளவு செலவாகும் என்று திட்டமிடச் சொன்னார். அவர்களும் 40 கோடி ரூபாய்க்கு ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சேது சமுத்திரத் திட்டம் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வரை கடலில் வீணடித்திருக்கும் இந்த அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊருக்கு ஒரு சாலை கூடப் போட முன்வரவில்லை " என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கே.முரளிதரன்.<br /><br />வாழத் தகுதியற்ற ஊர் என அரசாங்கம் அறிவித்து விட்டாலும், இன்றைக்கும் தனுஷ்கோடியிலும் அதனைச் சுற்றி இருக்கும் கடற்கரை கிராமங்களிலும் சுமார் 600 மீனவக் குடும்பங்கள், தாம் வாழ்ந்த அந்தக் கடற்கரை மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாமல் இன்றைக்கும் அங்கேயே மீன் பிடித்துப் பிழைக்கிறார்கள். (தனுஷ்கோடியைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் வளம் அதிகம். கடலின் நீர்மட்டம் குறையும் போது முழங்கால் அலவு நீரில் இறங்கி வெறும் கையாலேயே மீன் பிடிக்கலாம்!). ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் தங்கி. மணலைத் தோண்டி சின்னச் சின்ன கிணறுகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் குடிநீரையே பருகி வாழ்கிறார்கள். மின்சாரம் அறவே கிடையாது. ஊருக்குள் ஒரே யொரு டீக்கடை இருக்கிறது. அனைவரது வீட்டிலும் இருக்கும் ஃபிளாஸ்கில் டீ வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதைப் பருகுகிறார்கள். காய்கறிக்கடை வசதியெல்லாம் இல்லாததால் தினமும் விற்பனைக்காகப் பிடிக்கும் மீன்களில் ஒருசிலதான் அவர்களின் தினசரி சமையல். <br /> <br />‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என அறிவித்திருக்கும் அரசாங்கம் இந்த ஊரில் ஒரு நடுத்தரப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம். அங்கே 73 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை, இரண்டு ஆசிரியைகள், ஒரு சத்துணவு அமைப்பாளர் இதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த ஆசிரியைகள் தினசரி ஏழு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு ஆபத்தான வேன் பயணத்தின் மூலமாகத்தான் வந்து போவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள். தங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்கள் தாங்கள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள்,<br /><br />"இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகுதான், இந்த ஸ்கூலுக்கு வந்துபோக பஸ் கிடையாதுன்னு தெரிஞ்சுது. சுற்றுலாப் பயணிகள் வரும் வேன்லதான் நாங்களும் தினசரி வர்றோம். எங்களிடம் சில டிரைவர்கள் பத்து இருபது மட்டும் வாங்கிக்குவாங்க. சில பேரு இலவசமா இறக்கி விடுவாங்க. சில நாட்கள்ல, பயணிகள் கூட்டம் சேரலைன்னு வேனை எடுக்க மாட்டாங்க. அப்ப நாங்க இந்த மணல் பாதை வழியா தனியா நடந்தே வந்துட்டு, சாயந்திரம் நடந்தே போவோம். பல நாட்கள் தினசரி பதினான்கு கிலோ மீட்டர் வரை நடந்திருக்கோம். மழை நாட்களில் மிகவும் சிரமம். ஆனால், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவு ஒன்றுதான் எங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி" என்கிறார்கள் சோர்ந்துபோன குரலில். <br /><br />தங்க நாற்கரச் சாலைகள் இந்தியா நெடுக நீண்டு கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தீவிற்குக் கடற்கரை மணலின் ஊடாகச் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதைதான் சாலை. முகுந்தராயர் சத்திரம் என்னும் இடம் வரை பஸ்ஸிலோ காரிலோ வந்து, அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு வேனில்தான் பயணிக்க வேண்டும். வட நாட்டிலிருந்து புனிதப் பயணம் வருபவர்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சுமார் ஐம்பது பழைய வேன்கள் முகுந்தராயர் சத்திரத்தில் காத்திருக்கின்றன. ஓர் ஆளுக்கு கட்டணம் எண்பது ரூபாய். பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய அந்த வேன்களில் சுமார் முப்பது பேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். அந்த வேன் டிரைவர்களில் முக்கால்வாசிப் பேர், இருபதை தொட்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான ‘பேட்ச்’ மட்டுமே இருக்கிறது. ‘நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஹெவி லைசேன்ஸ் அநேகம்பேரிடம் கிடையாது’ என்பதை ஒப்புக் கொள்கிறார் ஒரு மூத்த டிரைவர். <br /><br />ஒத்தையடிப் பாதையாக, கடற்கரை மணலில் புதைந்தபடியே வளைந்து வளைந்து, குலுங்கியபடியே செல்லும் ஆபத்தான அந்தப் பயணத்தில் எந்நேரமும் அந்த வேன் கவிழ்ந்து விடும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. இப்படி தினசரி ஐநூறு பயணிகளாவது தனுஷ்கோடிக்கு வந்து போகிறார்கள். விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காகிறது. ஐயப்ப சீசனின்போது கூட்டம் இன்னும் அதிகரிக்குமாம். <br /><br />"இராமயணத்தைப் படித்து முடித்ததும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் தனுஷ்கோடி வந்தேன். ஆனால், ஆபத்தான இந்த வேன் பயணம் தற்கொலைக்கு சமம் என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் வந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உங்கள் அரசாங்கம் போக்குவரத்து வசதிகள் செய்யாதது ஏன்?" என்று கேள்வி கேட்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ரசே. <br /><br />"புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன். <br /><br />அந்த மக்கள் கேட்பதெல்லாம் ஒரு சாலை. ஆனால் 47 வருடங்களாக அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாழத் தகுதி இல்லாத அந்த ஊர் இப்போதும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடியில் சினிமாப்படம் எடுக்க விரும்புவர்களிடம் அரசு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. <br /><br />தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதனால் என்ன பயன்?<br /><br />" ரோடு வசதி தனுஷ்கோடிக்கு வந்துட்டா, பக்தர்கள் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வர வாய்ப்பிருக்கு. அதன்மூலம் அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் வருமானம் பெருகும்" என்கிறார் இராமேஸ்வரத்தில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றும் மாரிப்பிச்சை. 64ம் வருடத்திய புயலின்போது, தனுஷ்கோடி துறைமுகத்தில் போர்ட்டராக இருந்த இவரின் தாத்தாவால் தப்பிப் பிழைத்தவர் இவர்.<br /><br />"தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் தனுஷ்கோடியை புதுப்பித்து, ஓர் அழகான கடற்கரை கிராமமாக இதை உருவாக்கலாம். பக்தர்கள் தங்க லாட்ஜ்கள், வெளிநாட்டவர்களுக்கு ரிசார்ட்ச் என்று அமைத்தால் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான வரலாற்றுச் சின்னமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் தனுஷ்கோடி பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது" என்று யோசனை தெரிவிக்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான வி.துரைசிங்கம். <br /><br />ஆனால் இளைஞரும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த வலைப்பதிவருமான முகவைத் தமிழன் என்கிற ரெய்சுதீன் சொல்லும் யோசனை இவற்றையெல்லாம் விட ஆக்கபூர்வமானது. "இலங்கையின் நல்லுறவை விரும்பும் இந்திய அரசு, தனுஷ்கோடியை மறுசீரமைத்து கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். அதன் மூலமாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்த மாவட்டத்தின் நரிப்பையூரில் அமைத்ததைப் போலவே, தனுஷ்கோடியிலும் அமைத்தால் இராமேஸ்வரம் உட்பட அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.” என்னும் முகவைத் தமிழன் சினிமாக்காரர்ர்கள் மீது சீறுகிறார். <br /><br />“தனுஷ்கோடியை சினிமாக்காரர்கள் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது" என்கிறார் முகவைத் தமிழன் <br /><br />இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார். <br /><br />“கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.<br />தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் அரசு மனது வைத்தால் இப்போதும் கூட தனுஷ்கோடியை சீரமைத்து உயிர்ப்பிக்கலாம். <br /><br />மனது வைக்குமா? அல்லது வெறும் கனவாகவே போய்விடுமா? <br /><br /><span style="font-weight:bold;">நன்றி: புதிய தலைமுறை</span>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-13125800362610398242010-06-25T06:28:00.000-07:002010-06-25T06:36:40.273-07:00விஜய்க்கு கதை சொன்ன கதை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/TCSwyrRWXUI/AAAAAAAAASk/JM0ZMs8QFkY/s1600/vijay+-+jackie.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/TCSwyrRWXUI/AAAAAAAAASk/JM0ZMs8QFkY/s320/vijay+-+jackie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5486704630699547970" /></a><br /><br />இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் பணியாற்றுகிறபோது, அப்போது தயாரிப்பில் இருக்கும் படத்தைத் தவிர்த்து அனைவரிடமும் வேறு எதாவது ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்பதை வழக்கமாக்கி இருந்தார். அப்படியொரு நாளில் என்னிடம் இருந்த ஒரு இரட்டை வேடக் கதையின் சுருக்கத்தை அவரிடம் சுமார் முப்பது நிமிடத்தில் சொல்லி முடித்தேன். ’லைன் வித்தியாசமா இருக்கே... முழு திரைக்கதையோடு நாளை உதவி இயக்குனர்களையும் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார். <br />அடுத்த நாள் இயக்குனர், அவரது முன்னாள் உதவி இயக்குனரும் இந்நாள் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கிருஷ்ணா, மற்றும் சில உதவி இயக்குனர்கள் இருக்க அந்தக் கதையை ஒவ்வொரு சீனாக சுமார் இரண்டு மணி நேரம் சொல்லி முடித்தேன். கதையில் ஒருசில திருத்தஙகளைச் சொன்ன இயக்குனர் ’இது விஜய்க்கு சரியா இருக்கும். இன்னும் கொஞ்சம் டெலவப் பண்ணுங்க’ என்று சொல்லி விட்டார். அப்போது அவர் விஜயோடு இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் தள்ளிப் போனது. அதனால் எனது அந்த இரட்டை வேடக் கதை அப்படியே ஃபைல் அளவிலேயே இருந்தது.<br />அதன்பின்னர் அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அது வெற்றிகரமாக போகாததால் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். சமீபத்தில் விஜய்க்கு நெருக்கமான உதவி இயக்குனர் ஒருவரைச் சந்தித்தபோது எனது இரட்டை வேடக் கதையை அவரிடம் சொன்னேன். கேட்ட அவரோ மிகுந்த உற்சாகத்தோடு, ‘இது விஜய் சாருக்கு சூப்பரா இருக்கும். அவரையே கதை கேட்கச் சொல்றேன்’ என்று சொல்லிச் சென்றார். சொன்னபடியே விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று விஜயைச் சந்தித்த அந்த உதவி இயக்குனர் என்னிடமுள்ள கதை பற்றி சொல்லி இருக்கிறார். இரண்டு நாளில் ஒரு அலைபேசி அழைப்பு.<br />‘’ விஜய் சார் வீட்டுலேர்ந்து ராஜேந்திரன் பேசுறேன். சார் உங்களை கதை சொல்றதுக்காக 25 வெள்ளி காலை பதினோரு மணிக்கு அவரோட நீலாங்கரை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கார்’’<br />அதே நாள் அதே நேரத்திற்கு சற்று முன்னதாகவே ஆஜரானேன். ராஜேந்திரன் வரவேற்று அந்த பங்களாவிலேயே ஒட்டிக் கொண்டிருந்த இன்னொரு பகுதியான அலுவலக அறையில் அமர வைத்தார். <br />விஜயோடு அவரது ரசிகர்கள் எடுத்துக் கொண்ட படங்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய் வீட்டில் அவர் ஜாக்கிஷானின் ரசிகராக அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெரிதாக சுவற்றில் மாட்டியிருந்ததைப் பார்த்தபோது ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான் என்பது தெரிந்தது. சரியாகப் பதினோரு மணிக்கு கேஷுவல் டிரஸில் உள்ளே வந்த விஜய் ’ஹலோ சார்’ என்று கைகுலுக்கி எதிரே அமர்ந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். நான் பணி புரிந்த படங்கள் பற்றியும் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் திரைக்கதை விவாதங்களில் கலந்து கொண்டது குறித்தும் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டு,<br />’இந்தக் கதைய ரவிகுமார் கேட்டிருக்காரா?’ என்று கேட்டார். நான் முன்னர் நடந்த விஷயத்தைச் சொல்லி அப்போது ஏனோ உங்களுடன் சந்திப்பு நிகழவில்லை என்பதைச் சொன்னேன். <br /> ’நீங்க ரெடின்னா ஆரம்பிக்கலாம்’ என்று சொன்னவர், ‘என் wife உங்க கதைய கேட்கலாமா, if u don’t mind ‘ என்று கேட்டார். ‘தாராளமாக வரச் சொல்லுங்கள்’ என்றேன். உடனே தன் செல்போனில் மனைவியை அழைத்து ’வாம்மா’ என்றார். சற்று நேரத்தில் விஜய் துணைவி அங்கே வர அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அவர்களது வாரிசும். <br />இடது புற ஷோபாவில் அவரது துணைவியும் மகனும் இருக்க மேஜையின் எதிர்புறத்தில் விஜய் இருக்க நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.<br />அவரிடம் கதை சொல்ல அனுப்பிய அந்த உதவி இயக்குனர் ஏற்கனவே ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார்.<br />‘ விஜய் சார் கதை கேட்கும்போது அவரது முகத்தில் எந்தவித ரீயாக்ஷனும் இருக்காது. நகைச்சுவை காட்சிகளில்கூட சிரிக்க மாட்டார். அதுனால நீங்க அப்செட் ஆகிடாதீங்க.’<br />அப்படித்தான் இருந்தார். ஆனால் அவரது துணைவியார் முகத்தில் சில இடங்களில் ரீயாக்ஷன், சிரிப்பைக் காண முடிந்தது. அவரது மகன் முகத்திலோ ஒருசில நகைச்சுவை காட்சிகளைச் சொல்லும்போது (தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கொண்டே) பாதி சிரிப்பை பார்க்க முடிந்தது. <br />கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருபது நிமிஷங்களில் அந்த இரட்டை வேடக் கதையைச் சொல்லி முடித்தேன். <br />’சரிம்மா நீங்க உள்ள இருங்க’ என்று அவர்களை உள்ளே அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார் விஜய்.<br />கதை பற்றிய கருத்துக்களைக்கூட உடனே வெளிப்படுத்த மாட்டார் என்றும் அந்த உதவி இயக்குனர் முன்னரே சொல்லியிருந்த்தால் நானும் அதை எதிர்பார்க்காமல் விடைபெறவா என்றேன்.<br />’ஓக்கே சார்.. நான் தொடர்பு கொள்கிறேன்’ என்றார்.<br />’இதே மாதிரி சிங்கிள் ஹீரோ கமர்ஷியல் சப்ஜெக்ட் ஒண்ணு இருக்கு. உங்களுக்கு சரியா இருக்கும். டைட்டில் அக்பர்’ என்றேன்.<br />’இன்னொரு நாள் அதையும் கேட்டுர்றேன்’ என்று வழியனுப்பி வைத்தார் விஜய்.<br />அவர் தரப்பிலிருந்து அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்....<br />சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயிடமிருந்து அழைப்பு வராமலும் போகலாம். இல்லை எனது அந்த இரட்டை வேடக் கதையில் விஜய் நடிக்கும் அறிவிப்பும் வரலாம். <br />இரண்டையும் நிறைவோடு ஏற்றுக் கொள்வதுதான் நான்.<br />-----------கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-14053525371739120622010-04-11T01:37:00.000-07:002010-04-12T02:26:54.669-07:00ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLqjusI7I/AAAAAAAAARs/M8xTfts_v4c/s1600/DSC_0069.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLqjusI7I/AAAAAAAAARs/M8xTfts_v4c/s320/DSC_0069.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458797786611590066" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLghgqNQI/AAAAAAAAARk/L-JKXSyuXgk/s1600/DSC_0062.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLghgqNQI/AAAAAAAAARk/L-JKXSyuXgk/s320/DSC_0062.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458797614217180418" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLaTUXanI/AAAAAAAAARc/jC2sOQ_LKHM/s1600/DSC_0059.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLaTUXanI/AAAAAAAAARc/jC2sOQ_LKHM/s320/DSC_0059.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458797507328305778" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLUJ61-iI/AAAAAAAAARU/89rqZyAYbIc/s1600/DSC_0051.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLUJ61-iI/AAAAAAAAARU/89rqZyAYbIc/s320/DSC_0051.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458797401726122530" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLG23uZmI/AAAAAAAAARM/-0F-cMzUE0A/s1600/DSC_0043.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S8GLG23uZmI/AAAAAAAAARM/-0F-cMzUE0A/s320/DSC_0043.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458797173274469986" /></a><br />கடந்த பதினெட்டு வருடங்களாகத் தன் இசையால் மக்களின் மனதை ஆக்கிரமித்திருப்பவர் இசையமைப்பாளர். ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் பரிசை அவர் வென்றபோது ஒரு தமிழராக ஒவ்வொருவரையும் பெருமையடையச் செய்தவர். இந்தப் பெருமைகளின் பட்டியலில் அண்மையில் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதும், சர்வதேச அளவில் வழங்கப்படுகிற ‘கிராமி’ விருதும் இணைந்து கொள்கின்றன. <br />வாழ்வின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து, ஆரவாரம் இல்லாமல் அடுத்தடுத்து சாதனைகளைக் குவித்துக் கொண்டு போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றியின் ரகசியம்தான் என்ன? உழைப்பா? கற்பனைத் திறனா? தொழில்நுட்ப அறிவா? மனம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். அந்த மனதைப் படம் பிடித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால்?<br />’’புதிய தலைமுறை பத்திரிகையில் இப்போது நான் அஸிஸ்டண்ட் எடிட்டராக இணைந்திருக்கிறேன். அந்தப் பத்திரிகைக்கு ஒரு நேரடி ஸ்பெஷல் பேட்டி வேண்டும்’’ என்று ரஹ்மானுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். சில நாட்களிலேயே திடீரென ஒருநாள் பதில் அனுப்பியிருந்தார். <br />’இன்று மாலை ஐந்து மணிக்கு ஓக்கேவா?’ <br />என்று அந்த மெயிலில் என்னைக் கேட்டிருந்தார். உடனே ஓக்கே சொன்னேன். அடுத்த சில மணித்துளிகளில் அவரது தனி உதவியாளர் திரு.முகமத் ஃபைஸ் என்னை செல்லில் அழைத்து ’’மாலை ஐந்து மணிக்கு சார் உங்களை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்’’ என்று சந்திப்பை உறுதி செய்தார். அந்த இனிய மாலை வேளையில் ரஹ்மானோடு அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னோடு வந்திருந்த புதிய தலைமுறையின் உதவி ஆசிரியர்களான யுவகிருஷ்ணா, கவின்மலர், அதிஷா, புகைப்படக் கலைஞர் அறிவழகன் ஆகியோரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்முகத்தோடு கைகுலுக்கி அவர்களை அமரச் சொன்னார். நலம் விசாரித்தலுக்குப் பிறகு நேர்காணல் துவங்கியது. எங்களின் கேள்விகளுக்கு எந்தவித குழப்பமோ தடுமாற்றமோ இல்லாமல் சரளமான பதில்கள் . புன்னகையோடு வந்து விழுந்து கொண்டிருந்தன. <br />இதோ அவரது பிரத்யேகப் பேட்டி துவங்குகிறது.....<br />’<br /> <br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது. பல சர்ச்சைகளைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகம் இது. மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன். இது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்களுடைய அந்த ஆஸ்கார் பேச்சு, உங்கள் வயதைத் தாண்டிய முதிர்ச்சியோடு இருந்தது. இந்த முதிர்ச்சியை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?<br /> <br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> சின்ன வயதிலேயே எனக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இந்த முதிர்ச்சி வந்திருக்கலாம். சின்னப்பையனாக இருந்தபோதே ஸ்டுடியோவில் வேலைக்குச் சென்று விட்டேன். அங்கே வாழ்க்கையைக் கற்றுக்கொண்டேன். மரணத்தை நினைவுகூர்வதேகூட உங்களுக்கு முதிர்ச்சியைக் கொடுக்கும். நேற்று ஒரு ஆவணப்படம் பார்த்தேன். பதினாறாவது நூற்றாண்டில் வாழ்ந்த தெரசா என்கிற கிறிஸ்துவப் புனிதர் பற்றிய படம் அது. வாழ்க்கை என்பது விலை மலிவான விடுதியில் ஓர் இரவைக் கழிப்பதற்கு சமம் என்கிறது அந்தப்படம். வாழ்க்கை அந்தளவு தற்காலிகமானதுதான். இதை நான் சிறுவயதிலேயே உணர்ந்துவிட்டதாலோ என்னவோ, ஒருவேளை நான் முதிர்ச்சியோடு இருக்கலாம்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி: </span>மிகவும் கீழேயிருந்து உயரத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை இந்த உயரத்திற்குச் சென்றதற்கான ஃபார்முலா என்ன?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> என்னுடைய ஃபார்முலா என்று எடுத்துக்கொண்டால், நான் சூஃபியிஸத்திற்கு மாறிய பிறகு என் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போனது. அதன் தத்துவங்களின்பால் நான் ஈர்க்கப்பட்டேன். அதற்குப்பிறகு என் குடும்பத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டும். என் அம்மா, சகோதரிகள், மனைவி, குழந்தைகள் இப்படி ஒவ்வொருவரும் என்னுடைய முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கிறார்கள். குடும்பம் அமைதியானதாக இருந்தால்தான் உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். அவர்கள் என்னை ஊக்குவிக்கிறார்கள். நான் பணிக்குச் செல்லும்போது அவர்கள் எனக்கு ஆதரவளிக்கிறார்கள். நான் இப்போதிருக்கும் நிலைக்கு என் குடும்பம்தான் மிக முக்கியக் காரணம் என்று நான் சொல்வேன். அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாது போயிருக்கும்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> சூஃபியிஸம் உங்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னீர்கள். நீங்கள் சின்ன வயதிலேயே இசைத் துறைக்கு வந்து விட்டீர்கள். அதன்பிறகுதான் மதம் மாறியிருக்கிறீர்கள். என்ன காரணம்?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> அறிஞர்களும் சிந்தனையாளர்களும் சொல்வதுபோல மனித மனதில் எப்போதும் உண்மைக்கான தேடல் இருந்துகொண்டே இருக்கும். நாம் எங்கே கீழே சாய்ந்தாலும் அங்கே ஏதோ உண்மை இருக்கிறதென்று தேடிக்கொண்டே இருப்போம். அது காந்தம்போல. ஆன்மீகத்திற்கு அப்படி ஒரு கவர்ந்திழுக்கும் தன்மை உண்டு. எந்த வழி என்பது வேண்டுமானால் வேறுபடலாம். பௌத்தமாக இருக்கலாம், இந்து மதமாக இருக்கலாம், சூஃபியிஸமாக இருக்கலாம். ஏன், நாத்திகமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு வழியில் மனிதன் போயாக வேண்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆசீர்வதிக்கப்பட்டது சூஃபியிஸமாக இருந்தது. அதுதான் காரணம். <br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> ஆன்மீகம் உங்கள் வெற்றிக்குப் பயன்பட்டதா?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> முக்கியமாக நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் எல்லாமே பாதுகாப்பின்மையால் வருவதுதான். நேற்றுகூட எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். வந்தது: ‘நீங்கள் ஆபீஸ் போவதற்கு தயாராய் இருக்கிறீர்கள். அந்தச் சமயத்தில் உங்கள் மகள், உங்கள் மீது காபியைக் கொட்டி விடுகிறாள். கொட்டியது கொட்டியதுதான். அதை, இல்லை என்று செய்ய முடியாது. அந்தச் சமயத்தில் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, ‘அடுத்த முறை பார்த்து வேலை செய். கொட்டாமல் பார்த்துக்கொள்’ என்று சொல்லலாம் அல்லது கோபத்தோடு பளாரென்று ஓர் அடி அடித்துவிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, லேட்டானதற்கு பரபரப்பாகி, ஒன்றுமில்லாத விஷயத்திற்கு நேரத்தையும் சக்தியையும் வீணாக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வீர்கள்? நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, மன்னிக்கும் வாய்ப்பு. இரண்டு, பிரச்சினை செய்வது. இதுமாதிரி ஒவ்வொரு சூழலுக்கும் தேர்வுகள் பல இருக்கும். வெவ்வேறு சூழல்களிலும் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும். ஒரு மரணம் நிகழ்கிறதென்றால், அதை வைத்து மேலும் மரணங்களின் எண்ணிக்கையைப் பெரிதாக்குவதுபோல பிரச்சினையை மேலும் பெரிதாக்க வாய்ப்புகள் அமைகின்றன. இப்படி எந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. நடந்த விஷயத்தை விட்டுவிட்டு பாஸிட்டிவ்வாகப் போகலாமா அல்லது அதை மேலும் நெகடிவாக்கலாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். இதுமாதிரி அமைதியாக யோசித்து முடிவெடுக்க எனக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது. இசைக்கும் அது உதவுகிறது.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்களுடைய திரைப்பட இசையல்லாத ‘வந்தே மாதரம்’, ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ போன்ற தனி ஆல்பங்களை எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்பவையாக இருக்கின்றன. தேசியம், அமைதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த உணர்வுகள் எல்லாம் உங்களிடம் முன்பிருந்தே இருக்கிறதா அல்லது இசைத்துறைக்கு வந்தபின் ஆல்பத்திற்கான தீம் என்ற வகையில் மட்டும் இவற்றை தேர்வு செய்தீர்களா?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> முன்பிருந்தே ஈடுபாடு இருந்தது. எல்லா கலைஞர்களுக்கும் அதுமாதிரி ஆசைகள் இருக்கும். ஆனால், சரியாகச் செய்ய வேண்டும். நல்ல டீம் அமைய வேண்டும். நேரம் வேண்டும். அதற்கேற்றாற்போல், இறைவன் நம்மை வெற்றியடையச் செய்யவேண்டும். நிறையப் பேர் முயற்சித்திருக்கிறார்கள். சில முயற்சிகள் வெளிவராமலேயேகூட போயிருக்கின்றன. சில முயற்சிகள் ரொம்ப நாள் கழித்து மெதுவாக வெளிவந்திருக்கின்றன. ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஒரு வருடம் கழித்துதான் வீடியோவே பண்ணினோம். ‘வந்தே மாதரம்’ பரத்பாலாவோடு செய்தேன். அவருடைய அப்பா ஒரு தேச விடுதலைப் போராட்ட வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்தபோது இப்படிச் செய்யலாமே என்கிற எண்ணம் வந்தது. நிச்சயமாக இது ஒரு டீம்வொர்க். நான் மட்டும் காரணமில்லை.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்களுடைய ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஆல்பம் இந்தியாவிற்கு மட்டும் என்றில்லாமல், உலகளாவிய மனித குலத்திற்கான கருத்துகளைக் கொண்டிருந்தது. இதற்கான எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் ரெட்கிராஸ், பள்ளிகள் இப்படிப் பலவற்றை நிறுவி, நல்ல விஷயங்களை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் பழைய காலத்தில் செய்திருக்கிறோம். இப்போது பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, மனிதகுலத்திற்கு இந்தியாவுடைய பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்கிறேன். இன்னும் நிறையச் செய்திருக்கலாம். இந்த எண்ணமே எனக்கு அப்படி ஓர் ஐடியாவைக் கொடுத்தது. நாம் 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறோம். ஐடியாக்கள், தலைமைப்பண்பு என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. ஊழல் மலிந்துபோய் விட்டது. ஆனால், இளைஞர்கள் தலைமை பதவிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கிரிக்கெட்டில் சச்சின், சாஃப்ட்வேரில் நாராயணமூர்த்திபோல வெவ்வேறு துறைகளில் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் எல்லோருடைய கவனமும் சினிமாவில் இருக்கிறது. ஒரு சுதந்திரமான ஐடியாவை வைத்துக்கொண்டு, அந்த ஐடியாவின்மேல் நம்பிக்கை வைத்து அதை ஊக்கப்படுத்த நிச்சயமாக இங்கே ஆட்கள் இல்லை. அமெரிக்காவில் நிலைமை இப்படி இல்லை. அங்கே இந்தியர்களேகூட பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கே ஏதாவது புதிதாக முயற்சித்தால் ‘அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மச்சான்’ என்று சொல்லி விடுவார்கள். முளையிலேயே கிள்ளிப்போட்டு விடுவார்கள். ஆனால், இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நோக்கமிருந்து அதற்காகச் செயல்பட்டால், உடனே விளைவை எதிர்பார்க்கக்கூடாது. பொறுமை வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து வரலாம். அதற்கு மேலும்கூட ஆகலாம். காத்திருக்க வேண்டும். ஆனால், நம்பிக்கை வேண்டும். இப்போது கஷ்டப்பட்டால், இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம். அடுத்த வருஷம் கஷ்டப்பட்டால், அதற்கடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்க வேண்டும். ஆனால், நாம் இப்போதே ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு நாளைக்கே அதன் விளைவை எதிர்பார்க்கிறோம். பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்களுடைய இசையில் தமிழ் மண்ணுக்குரிய தன்மை தெரியவில்லையே? உங்கள் இசையை எந்த மொழிப் படத்திற்கும் பொருத்திக்கொள்ளலாம் போலல்லவா இருக்கிறது? <br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> தமிழ் மண்ணுக்குரிய தன்மையோடு படங்கள் அமைவதைப் பொறுத்துதான் நான் செய்ய முடியும். தமிழ் நேட்டிவிட்டியோடு, ‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற படங்கள் செய்தேன். அதிலும் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தேன். ‘லகான்’ பண்ணும்போது குஜராத் நேட்டிவிட்டியோடுதான் செய்தேன். மேலும் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் இந்தியா அனைத்துக்குமான படங்களாகவே இருந்தன. அதோடு என்னை இசையமைப்பாளராக நியமித்தால், அதே இசையைத் தெலுங்கில், இந்தியில் மார்க்கெட் பண்ணலாம் என்று தயாரிப்பாளர்கள் நினைத்து வந்தார்கள். அதனால், அப்படிச் சேர்க்கும்படியான நிர்ப்பந்தமும் அழுத்தமும் எனக்கு இருந்தன. சில படங்களில் மட்டும் அப்படி நேர்ந்தது. அதிலிருந்து வெளியே வரத்தான் நான் தனிப்பட்ட ஆல்பங்களைச் செய்ய ஆரம்பித்தேன். எனக்கான குரல்களை நான் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் எனக்கு ஆல்பம் செய்யும்போது கிடைத்தது. <br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> நீங்கள் அறிமுகப்படுத்திய நிறையப் பாடகர்கள் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்தார்கள். உங்களுக்குப்பின்தான் அப்படிப்பட்ட பாடல்கள் நிறைய வந்தன என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> ஆரம்பத்தில் அப்படி இருந்தது, உண்மைதான். ஆனால், அதுபோன்ற குரல்கள் என்னுடைய தேர்வு மட்டும் அல்ல. ஷங்கரிடம் நான் ஒரு பாடகரைச் சொல்வேன். ‘இல்லை வேண்டாம், புதுக்குரல் வேண்டும்’ என்பார். முதன் முதலில் ‘காதலன்’ படத்தில் உதித் நாராயணன் பாடினார். அது ஷங்கருடைய யோசனைதான். ‘அமீர்கானுக்கு ஒருத்தர் பாடுவாரே, அவரைப் போடலாமா?’ என்றார். ‘சரி! போடலாம்!’ என்று நானும் ஒத்துக்கொண்டேன். அந்தப் பாவத்தை நாங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது புதிதில்லை. டி.எம்.எஸ்.சின் தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், தமிழ்ப் பாடல்களுக்கு அவர் எவ்வளவோ பங்களிப்பு செய்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, சித்ரா இவர்கள் யாருக்குமே தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், அவர்கள் யாரும் தமிழைக் கொலை செய்யவில்லை. பயபக்தியோடு தமிழைக் கற்றுக்கொண்டு சரியாய் பாடுகிறோமா என்று ஒவ்வொரு முறையும் பரிசோதித்துவிட்டுத்தான் பாடுகிறார்கள். ஆனால், ஒரு மொழியைப் பாட வாய்ப்பு வரும்போது அந்தப் பாடகருக்கு அந்த மொழி உச்சரிப்பை கற்றுக்கொண்டு பாட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நான் உருதுமொழியில் பாடவேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் உருது கற்றுக்கொண்டேன். அதன்பிறகுதான் பாடினேன்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> சினிமாவைத்தாண்டி உங்களுடைய இசை பங்களித்திருக்கிறது. நீங்கள் இசையை ஒரு கலை வடிவமாகப் பார்க்கிறீர்களா அல்லது மெசேஜ் சொல்லும் ஒரு வடிவமாகப் பார்க்கிறீர்களா? <br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> முடிந்தவரை அதில் வாய்ப்பிருந்தால் மெசேஜ் கொடுக்கலாம். அதற்காக, வேண்டுமென்றே மெசேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி, ஒரு நல்ல கலை வடிவத்தை கெடுக்கவும் கூடாது. மக்களுக்கு போரடித்துவிடக்கூடாது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்கள், குதூகலமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று வருகிறார்கள். சில சமயம் அதிகமாக மெசேஜ் சொன்னால், படம் போரடித்து விடும். அப்படித்தான் மக்களின் மனநிலை இருக்கிறது. ஸ்லம்டாக் மில்லினியரில் கூட ‘உண்மை வெல்லும்’ என்ற மெசேஜ் இருக்கும். குரானில் வருவதுபோல ‘உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்கு தரப்போவதே இல்லை’ என்பதுதான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டால், பின்னாளில் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நம்பிக்கை இருக்க வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> ‘கல்லூரி சென்று பயிலாத நான் இன்று இந்தக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து பட்டம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று லண்டன் டிரினிடி கல்லூரியில் கௌரவ ஃபெல்லோஷிப் பட்டம் பெறும்போது சொன்னீர்கள். கல்லூரிக்குச் செல்லவில்லையென்ற ஏக்கம் உங்களுக்கிருக்கிறதா?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> நிறைய ஏக்கம் இருந்தது. ஆனால், வாழ்க்கை எனும் வட்டத்தில் சுற்றி நிற்கிற இந்தச் சமயத்தில் இப்போது நாங்களே கல்லூரி நடத்துகிறோம். பள்ளிக்குச் சென்று கற்பது ஒரு விஷயம் என்றால், நிஜ வாழ்க்கையில் கற்பது இன்னோர் விஷயம். நிஜ வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்தும் இடமாகப் பள்ளி இருக்க வேண்டும். நிறையப் பேர் வேறு ஒரு துறைக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஆனால், பெற்றோர் கல்வி கற்கச் சொல்வார்கள். ஆனால், என் விஷயத்தில் நேரெதிராக நடந்தது. நான் வேறு துறைக்குச் செல்ல நினைத்தேன். அம்மாவின் விருப்பம், நான் இசைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அம்மாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாய் இருந்தது.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> 23 வயதிலிருந்து 18 வருடங்களாக வாழ்க்கையில் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். கல்லூரி வாழ்க்கை தவிர, வேறு எதையாவது இழந்துவிட்டதாக உணர்ந்ததுண்டா?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> இழந்ததாகச் சொல்ல முடியாது. அப்படி உணர்ந்ததில்லை இசைத் துறையில் இருக்கும்போது அதுவே ஓர் இன்பம்தான். எல்லோருக்கும் பிடித்த ஒரு கலை வடிவத்தை நாம் செய்கிறோம் எனும்போது அதுவே ஓர் ஆசீர்வாதம்தான். அதற்காகப் புகார் தெரிவிப்பதைவிட இறைவனிடம் நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்கள் நண்பர்கள், பொழுது@பாக்கு?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> துரதிர்ஷ்டவசமாக நெருக்கமான நண்பர்களே யாரும் எனக்கு இல்லாமல் போய்விட்டார்கள். ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டு நண்பர்களோடு வெளியே போவதற்கெல்லாம் நேரமே இல்லாமல் போய் விட்டது. முக்கியமாக, என்னுடன் பணி புரிபவர்கள்தான் என் நண்பர்கள். வெளிநாடுகளுக்குச் சென்றால், என்னுடைய ஏஜெண்ட்டுகள்தான் என்னுடைய நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் உணவருந்தப் போவதுண்டு. ஆனால், அவர்களும் பிசினஸ்தான் பேசுவார்கள். அதனால், குடும்பத்தோடு இருப்பதைத்தான் நான் அதிகமாக விரும்புகிறேன். இப்போது ஆஸ்கார் கமிட்டியில் இருப்பதால், ஆஸ்கார் படங்கள் நிறையப் பார்க்கிறேன். தியேட்டருக்கு வந்து மக்கள் பார்க்கும் முன்னமே ஓசியில் நான் பார்த்து விடுகிறேன். 30 படங்கள் கையில் இருக்கிறது பார்க்க. அதனால், பொழுது போக்குவதற்கு என்று நேரம் அமைவதில்லை.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி: </span>ஆஸ்கார் வாங்கியபோது தமிழில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று சொன்னீர்கள். நீங்கள் வழக்கமாகச் சொல்லும் வாக்கியம் என்பதால் அதைச் சொன்னீர்களா அல்லது தமிழில் பேசவேண்டும் என நினைத்துச் சொன்னீர்களா?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> அங்கேயும் சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன். ‘நீ தமிழில் பேசுவாயா என்று காத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படியே பேசினாய். என் நம்பிக்கை மோசம் போகவில்லை’ என்று என் சகோதரி ரெகானாகூடச் சொன்னார்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லுங்களேன்?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> அப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல இன்ஸ்பிரேஷன். சின்ன வயதில் அவரைச் சந்தித்ததே மிகவும் குறைவு. ஏழெட்டு இடத்தில் ஒரே சமயத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்படித்தான் அவருடைய உடல்நலம் கெட்டது. அவர் இறந்த பிறகு, நான் கீ போர்டு வாசிக்க ஸ்டுடியோவுக்குச் சென்ற போது அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள்தான் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர். படத்தில் சொல்வதுபோல் அவருடன் பணியாற்றியவர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்வார்கள். ‘எங்கள் குடும்பம் அவரால்தான் நன்றாக இருக்கிறது’, ‘எங்கள் குழந்தைகளை அவர்தான் படிக்க வைத்தார்’, ‘வேலை போட்டுக் கொடுத்தார்’ என்று சொல்வார்கள் எல்லோரும். அதுமாதிரி ஒரு நல்ல அப்பாவிற்குப் பிறந்தது பெரிய விஷயம். அவரைவிட நல்லது செய்ய வேண்டும் என்று எனக்கே ஓர் அளவுகோல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என் அப்பா. அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர்தான் 74ல் முதன்முதலில் இந்தியாவில் சின்தஸைசர் வாங்கியவர். முதன்முதலாக இந்தியாவிலிருந்து ஒருவர் வாங்குவதால் ஜப்பானில் அவருக்கு ஃபிளைட் டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அவரை அனுப்பியிருக்கிறது அந்தக் கம்பெனி. இப்போது இசையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சின்தஸைசர்தான். <br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்கள் ரசிகர்களின் ஒரே குறை, தமிழில் இப்போது படமே நீங்கள் பண்ணுவதில்லையே என்பதுதான். ஹாலிவுட் பக்கம் பிஸியானதாலா? <br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அது மெச்சூர்ட் டீம். நன்றாக வரும் என நினைக்கிறேன்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி: </span>படங்களுக்குப் பணியாற்றும்போது இரவுகளில்தான் நீங்கள் பணியாற்றுவீர்கள். ‘பாம்பே ட்ரீம்ஸ்’ போன்ற நாடகங்களுக்கு எப்படி நீங்கள் பணியாற்றினீர்கள்? ஒத்திகைக்கு மற்ற எல்லோரோடும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடகத்திற்கு இசையமைப்பதற்கும், திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> சினிமாவைவிட நாடகத்திற்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகம். பெரிய பெரிய ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் இலவசமாக வந்து நடித்துக் கொடுக்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரிய விஷயம். இரண்டு நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அதில் கற்றுக்கொண்டது நிறைய. இப்போது எனக்கு அந்த அனுபவம் கைகொடுக்கிறது. நாடகத்தில் பணியாற்றிவிட்டு சினிமாவுக்கு வரும்போது இன்னும் திறமை கூடும். இந்தியாவிலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. எதிர்காலத்தில் வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். எங்கள் இசைப்பள்ளியில் மாணவர்கள் வெளிவரும்போது அதற்கான வாய்ப்பு இருக்கும்.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> உங்கள் மியூஸிக் ஸ்கூல் பற்றி சொல்லுங்களேன்?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்:</span> இந்தியாவில் அதுமாதிரி ஸ்கூல் இல்லை. சில இருக்கின்றன. ஆனால், ரிசல்ட் சரியாக இல்லை. சீனி, செல்வக்குமார் போன்ற என்னுடைய நிறைய நணபர்கள் ஊக்கப்படுத்தினார்கள். நம் ஊரிலேயே நமக்கு ஒரு ஆர்க்கெஸ்ட்ரா இல்லை. என் அப்பா காலத்து ஆட்கள்தான் இன்னமும் வாசிக்கிறார்கள். இளைய தலைமுறை இசை கற்றுக்கொண்டு வரவேண்டுமென்றால், அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். வெளிநாடுகளில் அரசாங்கமே இத்தகைய கல்லூரிகளை நடத்துகின்றன. நம் ஊரில் கர்நாடக சங்கீதத்திற்கெல்லாம் அரசாங்கமே கல்லூரிகள் வைத்திருக்கின்றது. ஆனால், மேற்கத்திய இசைக்கு, இந்துஸ்தானி இசைக்கு இல்லை. அதனால், நாம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 200 மாணவர்கள் பயில்கிறார்கள். இரண்டாண்டு டிப்ளமோ வகுப்புகள் நடக்கின்றன. இது மூலம் நிறைய இளம் இசைக் கலைஞர்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி: </span>கீ-போர்ட் ஆர்ட்டிஸ்டாக இருந்த ரஹ்மானுக்கும், ஆஸ்கார்வரை சென்று வந்த இசையமைப்பாளர் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> அப்படியெல்லாம் நான் வித்தியாசம் பார்ப்பதேயில்லை. இசையில் ஓர் உள்ளார்ந்த சுயம் பிரதிபலிக்கும். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். நம் நல்லது கெட்டது எல்லாமே கலையில் பிரதிபலிக்கும். என்ன உள்ளே போகிறதோ அதுதான் பிரதிபலிக்கும். அதன்படிதான் எனக்கும் நடக்கிறது.<br /><br /><span style="font-weight:bold;">கேள்வி:</span> புதிதாக வரும் இளையதலைமுறை இசைத் துறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?<br /><br /><span style="font-weight:bold;">ரஹ்மான்: </span> முன்புபோல யாரும் சாதுவாக இல்லை. இன்டர்நெட் மூலம் புதிதாக அறிமுகமாகும் அத்தனையையும் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இந்தியாதான் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு. இது நல்ல விஷயம். வருங்காலம் நன்றாக இருக்கும். கவிக்கோ சொன்னது மாதிரி ஒவ்வொரு விதைக்கும் தெரியும், அது என்ன செடியாகப் போகிறதென்று. அதுபோல நாம் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ரோஜாச்செடி மல்லிகைப்பூ பூக்க நினைத்தால் முடியாது. அதுபோல நாம் யார் என்பதையும் நமக்குள் என்ன இருக்கிறது என்பதையும் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறொருவர் ஸ்டைலைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு நமக்கான தனிப்பட்ட ஸ்டைலை தேடிக் கொள்ள வேண்டும். இது இசைக் கலைஞருக்கும், பாடகருக்கும் கூடப் பொருந்தும்.<br /> <br />நன்றி: புதிய தலைமுறை வார இதழ்கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-46481921220727901942009-11-10T10:21:00.000-08:002011-04-04T06:57:56.328-07:00ஒரு நெகிழ்வான இசை நிகழ்ச்சி!<a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmzgQnim7I/AAAAAAAAAPA/JKFeWgV4dd0/s1600-h/FOR+UDAYAM+7.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402546594805619634" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmzgQnim7I/AAAAAAAAAPA/JKFeWgV4dd0/s320/FOR+UDAYAM+7.JPG" border="0" /></a><br /><div><a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmzDd2BhSI/AAAAAAAAAO4/SBr268l0W34/s1600-h/FOR+UDAYAM+6.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402546100139820322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmzDd2BhSI/AAAAAAAAAO4/SBr268l0W34/s320/FOR+UDAYAM+6.JPG" border="0" /></a><br /><br /><div><a href="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Svmx-Ni012I/AAAAAAAAAOw/I_tpEGAS9p8/s1600-h/for+udayam+5.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402544910353356642" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Svmx-Ni012I/AAAAAAAAAOw/I_tpEGAS9p8/s320/for+udayam+5.JPG" border="0" /></a><br /><br /><br /><div><a href="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmxhUTjckI/AAAAAAAAAOo/ah9qUWZMCms/s1600-h/for+uthayam+4.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402544413952143938" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmxhUTjckI/AAAAAAAAAOo/ah9qUWZMCms/s320/for+uthayam+4.JPG" border="0" /></a><br /><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmxCTWhjaI/AAAAAAAAAOg/QfKwlnsJuSc/s1600-h/for+uthayam+3.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402543881120222626" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmxCTWhjaI/AAAAAAAAAOg/QfKwlnsJuSc/s320/for+uthayam+3.JPG" border="0" /></a><br /><br /><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmwkCaWgdI/AAAAAAAAAOY/WbJ5Ua8rFUY/s1600-h/for+uthayam+2.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402543361176797650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmwkCaWgdI/AAAAAAAAAOY/WbJ5Ua8rFUY/s320/for+uthayam+2.JPG" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmwGhsbv5I/AAAAAAAAAOQ/8qYM57WulAk/s1600-h/for+udayam+1.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5402542854178062226" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SvmwGhsbv5I/AAAAAAAAAOQ/8qYM57WulAk/s320/for+udayam+1.JPG" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><div>ஒரு கிராமத்தின் தாய்க்கு இரண்டு ஆண்பிள்ளைகள். இருவருக்குமே படிப்பில் ஆர்வம் இல்லை! மூத்தவனுக்கு கதை கவிதை, பத்திரிகைகளில் ஈடுபாடு. இளையவனுக்கோ கால்பந்தாட்டத்தில் கவனம். பள்ளி நாட்களின்போது நடந்தவொரு போட்டியில் அவனது கால் எலும்பு முறிந்துபோக, இரண்டுமாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலை. அவனைப் பார்க்கவந்த ஒரு நண்பன், வழியில் யதேச்சையாக வாங்கிய ஒரு புல்லாங்குழலை அவனது கையில் கொடுத்துவிட்டு ‘’ஆஸ்பத்திரியில் போரடித்துப் போயிருப்பாய்; சும்மா இதை ஊதிக் கொண்டு இரு’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் அந்தப் புல்லாங்குழல் மீது எதோ ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது.<br /><br />அடுத்த நாளிலிருந்து அதை வாசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். முதலில் காற்றுதான் வந்திருக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பாடல்களை வாசிக்க, அதன் துளைகளுக்குள் இருந்த ரகசியம் வெகுசீக்கிரத்திலேயே பிடிபட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியிலேயே அந்த புல்லாங்குழலை விட்டுவிட்டு வராமல் கையோடு எடுத்துவந்திருக்கிறான் அந்த இளையவன். நண்பர்கள் முன்னிலையில் சினிமாப் பாடல்களை வாசித்துக் காட்டி, அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த பாராட்டுதல்கள் அவனைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் கோயம்புத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த சேரன் இன்னிகைக் குழுவின் மேடையில். அங்கிருந்து திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு... அந்த காலகட்டத்தில் இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.<br /><br />அவனது இசை ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்க அடுத்து சென்னை பயணம். கே.ஜே.ஜேசுதாஸின் இசைக் கச்சேரிகளில் வாசிக்கிற அளவுக்கு அவனது இசைப்புலமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அங்கிருந்து சினிமா பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள், தேவாவின் சகோதரர்களான சபேஷ்-முரளி. தேவாவின் அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த இளையவனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டிருக்கலாம். வெறும் புல்லாங்குழலிலே பல வருடங்கள் புழங்கிய அவனுக்கு மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸஃபோனை வாசிக்க வேண்டும் என்கிற காதலால் அதையும் வாங்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். இப்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜிடம் அந்த இனிய கருவியை வாசித்துக் கொண்டிருப்பதும் இவனே. <br /><br />இவனுக்குள் மிக நீண்ட நாட்களால் ஒரு ஆசை. இசைக் கடல் மெல்லிசை மன்னரின் சூப்பர்ஹிட் பாடல்களை அந்த சாக்ஸஃபோன் கருவியில் வாசிக்க வேண்டும் என்பதுதான். அவனது ஆசையைக் கேள்விப்பட்டு கைகொடுக்க முன்வந்தார் ஒரு தொழிலதிபர். அவரது பெயர் தேவய்யா.<br /><br />அதே மெல்லிசை மன்னரின் முன்னிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அந்த இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க கடந்த ஆறாம் தேதி இரவு சுமார் மூன்று மணி நேரம் காமராஜர் அரங்கமே இசை மழையில் நனைந்தது. பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சுதாங்கன், இயக்குனர் ஆதவன், இளவட்டம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, பாடலாசிரியர் காமகோடியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய இந்த இசை நிகழ்வு, மிக விரைவிலேயே பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு இந்த இசை நிகழ்ச்சி, டிவிடியாகவும் ஆடியோ சிடியாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது.<br /><br />இதிலே மிக ஒரு குழந்தையின் மனதோடு, குதூகலமாகக் கலந்து கொண்ட மெல்லிசை மன்னருக்கு இந்த இசை நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்த தேவய்யா, ஒரு வைர மோதிரத்தை மேடையிலேயே அனைவரது முன்னிலையிலும் தன் www.megagigashows.com நிறுவனத்தின் சார்பில் பரிசளித்த காட்சி அருமை!<br /><br />அதுசரி, இதில் ஆரம்பத்தில் சொன்ன கதை, கவிதை, பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருந்த மூத்தவன் என்ன ஆனான்? இளையவனுக்கு முன்னரே சென்னைக்கு வந்து, அவனது ஆர்வத்தால் சில பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறான். இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றிய அவன் பின்னர் கே.எஸ்.ரவிகுமாரின் தசாவதாரம் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை உதவியாளனாக பணியாற்றி வருகிறான். பத்திரிகையிலும் அவனுக்கு ஆர்வம் என்பதால் தற்போது வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் ’புதிய தலைமுறை’ இளைஞர் வார இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றுகிறான்.<br /><br />சென்னையில் கலை, சினிமா, இசை, பத்திரிகை என, இன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு, தங்களைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னையை கெளரவப்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதற்கு இந்த இசை மேடை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர, 83 வயதான அந்தத் தாயை ( திருமதி ஷண்முகம் அம்மாள் முத்திருளாண்டி) மேடைக்கு வரவழைத்து எம்.எஸ்.வி, கே.எஸ்.ரவிகுமார் முன்னிலையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி கெளரவப்படுத்தி இருக்கிறார்கள், இந்தச் சகோதரர்கள்!<br /><br />ஒரே மேடையில் தன் இரு மகன்களும் சேர்ந்து தன்னைச் சிறப்பித்த காட்சியைக் கண்டு அந்த அன்னையின் மனம் கொண்ட மகிழ்ச்சியை நீங்கள் இங்கே இருக்கும் புகைப்படங்களில் பார்க்கலாம்.<br /><br />எல்லாம் சரி. யார் இந்த அபூர்வ சகோதரர்கள்?<br /><br />இந்த உண்மைக்கதையில் மூத்தவன் யாரோ....?<br /><br />சாட்சாத் இதே கல்யாண்குமாராகிய நான்தான்!<br /><br />இளையவன்...?<br /><br />என் உடன்பிறந்த சகோதரன், இசைக்கலைஞன் நாதன்.!<br /><br />எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை தங்களின் அன்னையை கெளரவப்படுத்தும் அரிய சந்தர்ப்பம்.<br /><br />எங்களுக்கு அமைந்தது அந்த அன்னையின் ஆசியால்தான்!<br /><br />ஆகவே என்றும் அன்னையை மதிப்போம்....அவர்தம் காலடியைத் துதிப்போம்! சரியா?<br />--------------------------- </div></div></div></div></div></div></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-46503416401989546972009-10-20T22:28:00.000-07:002009-10-20T22:43:53.315-07:00மிஸ். தீபிகாவின் துணிச்சல்!<a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6d6SMgsVI/AAAAAAAAANw/5vdtrycAwtk/s1600-h/deepika_3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5394923028278718802" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6d6SMgsVI/AAAAAAAAANw/5vdtrycAwtk/s320/deepika_3.jpg" border="0" /></a><br /><div><a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6dF-_qEdI/AAAAAAAAANo/k2TBQkMtH-Y/s1600-h/deebika3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5394922129771336146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6dF-_qEdI/AAAAAAAAANo/k2TBQkMtH-Y/s320/deebika3.jpg" border="0" /></a><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6c0UpzB2I/AAAAAAAAANg/JcwfHelM5fQ/s1600-h/deepika_2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5394921826347583330" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/St6c0UpzB2I/AAAAAAAAANg/JcwfHelM5fQ/s320/deepika_2.jpg" border="0" /></a><br /><br /><br /><div><strong><em>சமீபத்தில் ஒரு துணிச்சலான கல்லூரி மாணவியைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். படித்துப் பாருங்கள்….</em></strong></div><br /><br /><br /><div>சென்னை எத்திராஜ் கல்லூரியின் வாசல். மாணவிகள் ஆட்டோக்களிலும் கார்களிலும் ஸ்கூட்டிகளிலும் வந்து இறங்கி தங்கள் வகுப்பு நோக்கிப் போகிறார்கள். ஸ்டைலாக சுசுகி பைக்கில் வந்து இறங்குகிறார் ஒரு மாணவி.<br />பத்தொன்பது வயதான தீபிகா, அந்தக் கல்லூரியில் டூரிஸம் அண்ட் மானேஜ்மெண்ட் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விதமான திறமைகளை வளர்ந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வங்கள் பட்டியலிட்டால் அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்றுதான் பைக் ஓட்டுவது. கல்லூரிக்கு மட்டுமல்ல, ஷாப்பிங் போவது, தோழிகளின் வீட்டுக்குப் போவது எல்லாவற்றிற்கும் இவர் உபயோகப்படுத்துவது இந்த பைக்கைத்தான். இரண்டு வருஷமாக பைக் ஒட்டி ரொம்ப போரடித்து விட்டதால், அடுத்த மாதம் ஆண்களே ஓட்டத் தயங்குகிற புல்லட்டை வாங்கவிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார் தீபிகா.<br />சின்ன வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர் தீபிகா. நாய்க்குட்டியில் ஆரம்பித்த அந்த ஆர்வம் அணில், கொக்கு, மீன்கள், வெளிநாட்டுப் பறவைகள் என்று நீண்டு, இப்போது படமெடுத்தாடும் பாம்பில் வந்து நிற்கிறது!<br />பாம்பா?<br />அதிர்ச்சியாய் கேட்பவர்களுக்கு கூலாக பதில் சொல்கிறார் தீபிகா.<br />‘’ நாய்க்குட்டி, அணில் மாதிரி அதுவும் ஒரு பிராணிதான். தேவையில்லாம அதை ஒரு விரோதியப் பாக்குற மாதிரி நாம நடந்துக்குறோம். அது நம்மைப் பார்த்து பயந்து போய்தான் தப்பிச்சு ஒளியறத்துக்காக ஓடுது. அதத் துரத்தி அடிக்க முயலும்போதுதான் அது நம்மைத் திருப்பித் தாக்குது. அதுனால அதையும் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணா அது நம்மகூட ஃப்ரெண்ட்லியா இருக்கும்’’ என்று தன் விளக்கத்தை சொல்கிறார். பாம்புகள் மீது இவர் கொண்டிருக்கும் அன்பு, இவரின் அப்பா திருநாவுக்கரசுவோடு இணைந்து ஒரு இயக்கத்தையே ஆரம்பிக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. கூடிய விரைவில் அதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கும் தீபிகா, பாம்புகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற அளவுக்கு அதைப் பற்றி தகவல்களைக் ’கொட்டிக்’ கொண்டேயிருக்கிறார்.<br />இதுவரை தண்ணிப்பாம்பு, பச்சைப்பாம்பு, சாரையில் வெள்ளை சாரை, மஞ்சள் சாரை, கட்டுவிரியன், கோதும நாகம், மஞ்சள் நாகம் என்று பலவகைப் பாம்புகளையும் துணிச்சலாக கையில் பிடித்து வருடிக் கொடுத்திருக்கும் தீபிகாவிற்கு கேரளக் காடுகளில் வாழும் ராஜநாகத்தை பிடித்துப் பார்க்கவேண்டும் என்பது லேட்டஸ்ட் ஆசை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதுவும் நிறைவேறிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கேரளக் காடுகளிலிருந்து உணவுக்காக கர்நாடக விவசாயக் கிராமங்கள்வரை போய் திரும்புகிற அந்த ராஜநாகங்கள், மிகவேகமாகப் போய்வரும் தகவலையும் ஆதாரப்பூர்வமாக சேகரித்து வைத்திருக்கிறார் தீபிகா.<br />சட்டப்படி பாம்புகளை தனிப்பட்ட முறையில் வளர்க்கக் கூடாது. அதனால் வீடுகளில் பிடிபடும்போதும் வேறு எங்காவது அடிபட்ட பாம்புகளை மட்டுமே எடுத்துவந்து அதற்கு சரியான சிகிச்சைகளை அளித்துவிட்டு சிலநாள் கழித்து அடையாறில் உள்ள அரசு பாம்புப் பண்ணையிலோ அல்லது எதாவது காட்டுப் பகுதியிலோ விட்டு விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் இவர். பாம்புப் பண்ணை அதிகாரிகளும் இவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய அரிய தகவல்களை இவருக்கு தந்து உதவுவதை நன்றியோடு நினைவு கூர்கிறார்.<br />அதுசரி, இத்தனை வருட அனுபவத்தில் தீபிகா பாம்பிடம் எத்தனை கடி வாங்கியிருப்பார்?<br />’’ அதுதான் இல்லை. ஒருமுறை கூட நான் கடி வாங்கியதில்லை. எல்லா பாய்ஸும் (பாம்பை இப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்) எங்கிட்ட அன்பாத்தான் பழகுவாங்க. சாரைப் பாம்பு பல்லு மட்டும் ஆக்ஷா பிளேடு மாதிரி இருக்கும். அதுக்கு இரை போடும்போது ஒருசில சமயம் அந்த பல்லு என்னோட தோளுல படும். அப்ப அந்த இடத்துல மட்டும் லேசா வீங்கும். ஆனா அதுக்கு ஆந்திராவுலேர்ந்து வாங்கி வைச்சிருக்கற ஒரு நாட்டு மருந்து என் கைவசம் இருக்கு. உடனே அதை அப்ளை பண்ணிடுவேன். அரைமணி நேரத்துல சரியாகிடும்.’’ என்று சொல்லிச் சிரிக்கும் தீபிகாவுக்குப் பாம்புகளைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின் பெர்னாண்டஸ்.<br />ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சுமார் 42 வருடங்களாக பாம்புகளோடு பரிச்சயம் உள்ளவர். பலவீடுகளில் இவரால் இதுவரை பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கும் என்கிறார் இவர். தீபிகாவைப் பற்றி என்ன சொல்கிறார் இவர்?<br />’’ அந்தப் பொண்ணோட துணைச்சலை பாராட்டியே தீரணும். ரொம்ப நாளா தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்துச்சு. அவங்க ஆர்வத்தைப் பார்த்துட்டுதான் பாம்புகளை எப்படி கையாள்றதுங்கற டெக்னிக்கை மட்டும் ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் பொண்ணும் பிடிபடுற பாம்புகளுக்கு சிகிச்சை அளிச்சு காடுல்கள்ல கொண்டு போய் விடறாங்க. இந்தத் துறையில நிறைய ஆர்வம் இருக்கறதால இதுல எதாவது சாதிப்பாங்க’’ என்று சர்டிபிகேட் தருகிறார்.<br />தீபிகாவின் அப்பா ஒரு குத்துச்சண்டை வீரர். அதனால் பாக்ஸிங் கலையையும் விட்டு வைக்கவில்லை தீபிகா. தற்காப்புக்காக முறைப்படி அதைக் கற்று வைத்திருக்கும் இவருக்கு ஆயில் பெயிண்டிங் வரைவதில் மிகப்பெரிய ஆர்வம். அதிலும் அரச இலைகளில் இவர் வரையும் ஓவியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம். ரங்கோலி வரையும் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கும் தீபிகாவின் இந்த தசாவதார டேலண்ட்களால் கல்லூரியில் இவருக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம்.<br />பட்டம் பெற்றதும் அடுத்த கனவு தீபிகாவுக்கு ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதி உயர் வனத்துறை அதிகாரியாக செயலாற்றுவதுதானாம்.‘’ எதிர்காலத்தில் காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் நான் தீவிரமாக காதலிக்கப் போகிறேன்’’ என்று சீரியஸாகச் சொல்கிறார் இந்தக் காடுகளின் காதலி. </div><div> </div><div><strong><em>- இந்த கல்லூரி மாணவியின் துணிச்சலை நீங்களும் பாராட்ட நினைத்தால் அவரது மெயில் ஐ.டி.க்கே ஒரு நாலு வார்த்தை தட்டிவிடுங்கள் நண்பர்களே!<br /></em></strong>deepika.devi1@gmail.com<br />------------------- </div></div></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-12725303501988202272009-08-18T07:20:00.000-07:002009-08-18T07:39:57.201-07:00’’எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..’’<a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Soq8_GFqzLI/AAAAAAAAAKg/UO6CQNC4S2Y/s1600-h/MGR1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5371313297744907442" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 100px" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Soq8_GFqzLI/AAAAAAAAAKg/UO6CQNC4S2Y/s320/MGR1.jpg" border="0" /></a><br /><div>அப்போது நான் ’தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.<br />எதிர்முனையிலிருந்து ஒரு குரல் –<br />’’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்...ஆசிரியர் இருக்கிறாரா?’’<br />அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.<br />’’ இன்னும் வரலை சார்....’’<br />’’ நீங்க யார் பேசறது?’’<br />‘’ நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்’’<br />’’சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.<br />என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,<br />’’ ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..’’ என்றேன்.<br />‘’இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.’’ என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.<br />ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!<br />சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.<br />விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.<br />முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.<br />அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:<br />‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.<br />‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’<br />அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!<br />‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’<br />‘’ நீங்க யார் பேசறது?’’<br />‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’<br />‘’உங்க பேரு என்ன?’’<br />’’லச்சுமி’’<br />‘’எந்த ஊரு?’’<br />’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’<br />’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’<br />’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’<br />‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’<br />‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’<br />’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’<br />’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’<br />‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’<br />’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’<br />‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’<br />’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’<br />’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’<br />‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’<br />‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’<br />‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’<br />‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’<br />’’மறுபடி சொல்லுங்க....’’<br />‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’<br />அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!<br />இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.<br />அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!<br />--------------------- </div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-21441136952367025052009-07-26T11:22:00.000-07:002009-07-26T20:16:23.767-07:00நன்றி தோழிகளே... நண்பர்களே...தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட புரட்சிதான் இந்த இணையம் என்று சொல்ல வேண்டும். ஒரு புதிய கண்டுபிடிப்பை எந்தெந்த வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் மற்ற மொழி பேசுபவர்களிடம் குறைவுதான் என்பதே என் கருத்து.<br /><br />கணினி, மின்னஞ்சல், தமிழ் சாப்ட்வேரைத் தொடர்ந்து பிறந்த குழந்தைகள்தான் இணைய தளங்களும், இணையப் பக்கங்களும், வலைப்பூக்களும்! இந்த இனிய குழந்தைகளைப் பயன்படுத்தி தமிழ் நெஞ்சங்கள் தங்களின் கருத்துப் பரிமாற்றங்களை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்.<br /><br />நான் வலைப்பக்கத்திற்கு அறிமுகமான போது அதன் வீரியம் பற்றி அதிகம் அறியாதிருந்தேன். இங்கே சில நண்பர்களைப் பற்றியும் சில தோழிகள் பற்றியும் நான் நன்றியோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br /><strong><em>மதுமிதா....</em></strong><br /><br />வலைப்பக்கத்தைப் பற்றியும், அதன் வட்டத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும், அதன் வடிவமைப்பு பற்றியும் எனக்கு மிகப் பொறுமையாக செல்போன் வாயிலாகவே கற்றுத் தந்தவர் தோழி கவிதாயினி மதுமிதா. வலைப்பூக்களின் பதிவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் இவர். அன்பு, மென்மையான அணுகுமுறை, எழுத்தில் ஒரு நேர்மை இவைகளை இன்றைக்கும் கடைபிடிப்பவர்.<br /><br /><strong><em>தமிழச்சி....</em></strong><br /><br />அதன்பிறகு இதே வலைப்பக்கத்தின் மூலமாக தமிழச்சியுடன் ஏற்பட்டது சினேகம். ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும் ஏகப்பட்ட சண்டைகள்!! ஆனால் இனிய சினேகிதி. துணிச்சலான, அதே நேரம் அறிவு பூர்வமான அவரது எழுத்துக்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ஈரோட்டில் பிறந்த ஈவேரா பெரியாருக்கு, ஐரோப்பாவில் இன்றைக்கும் ஒரு இயக்கத்தையே நடத்தி வரும் பெண்மணி. தமிழ்நாட்டில்கூட இல்லாத அளவுக்கு பெரியாருக்காக ஒரு வலைத்தளத்தையே உருவாக்கி அவரது படைப்புகளை தினமும், தானே அதில் பதிவு செய்வதை ஒரு கடமையாகவே செய்து வருபவர். எனக்கு இவர் அறிமுகமாவதற்கு முன்னர், இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாவர் என்றாலும் அவரது புரட்சிகரமான செயல்களுக்காக நான் அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். இணையத்தில் ஏற்படும் சில குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லும் ஒரு நல்ல தோழியாக இன்றும் இருக்கிறார். அவரது நட்பு என்றும் தொடரும்.<br /><br /><strong><em>சிவகுமார்...</em></strong><br /><br />பிரபல டிராக்டர் கம்பெனியான tafe வின் சென்னை ரீஜெனல் மானேஜர் இவர். பழகுவதற்கு இனிய நண்பர். இவரும் எனக்கு இணையத்தின் மூலமாகவே நண்பர் ஆனவர். ஆனால் இப்போது எனது குடும்ப நண்பர். ஏற்கனவே இருபது வருடம் பழகியது போல் எங்களின் நட்பு இன்றைக்கும் இனிதே தொடர்கிறது.<br /><br /><strong><em>ஏ.ஆர்.கே.ராஜராஜா...</em></strong><br /><br />இவரும் இணையத்தில் பிரபலமானவர்தான். தமிழ்ராஜா என்கிற பெயரில் உலா வருபவர். உற்சாகத்தின் ஊற்றாக செயல்படுபவர். இளவட்டம் என்கிற படத்தின் இயக்குனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சுமார் 200 தெலுங்குப் படங்களுக்கு தமிழின் வசனகர்த்தா. இவரோடு பேசிக் கொண்டிருந்தால் ஊமைகூட பாடகன் ஆகிவிடுவான் என்பது எனது கணிப்பு.<br /><br /><strong><em>வெங்கட் தாயுமானவன்...</em></strong><br /><br />என்னுடைய ‘அப்பாவுக்கு ஒரு இமெயில்’ சிறுகதையை இணையத்தில் படித்துவிட்டு அறிமுகமான உதவி இயக்குனர். ஆனால் அவருக்கு கேன்ஸர் இருப்பதையே போகிற போக்கில் என்னோடு பகிர்ந்து கொண்டவர். பதறிப் போன நான் அவரைப் பற்றிய தகவல்களை செல்போன் மூலமாகவே சேகரித்து அதை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு அது ஆனந்த விகடனிலும் வெளியானது. நம்பிக்கையான இளைஞர். அவரது வெற்றிக்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறேன்...<br /><br /><strong><em>நர்சிம்....</em></strong><br /><br />இதே வெங்கட் தாயுமானவனின் சோகக்கதையைப் படித்துவிட்டு அவரது சிகிச்சைக்கான முழுச் செலவையும் தானும், தான் பதவி வகிக்கிற ஒரு பன்னாட்டு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும் என்று உடனே அறிவித்த அன்பு நண்பர். இவரையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை. ஆனால் ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிற அவரது நல்ல மனசுக்காகவே அவரை எனது இனிய நண்பராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இணையத்தின் மூலமாக இப்படி நூறு நர்சிம்கள் நம் அனைவருக்கும் நண்பர்களாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.<br /><br /><strong><em>என். கணேசன்....</em></strong><br /><br />அய்யா கணேசன் அவர்களை எனது நண்பர் என்று விளித்துக் கொள்ளக் கூடாது. மிகப்பெரியவர் அவர். பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த இவர், இன்றைக்கு அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தில் உயர் பதவி வகிப்பவர். என் இணைய எழுத்துக்களைப் படித்துவிட்டு என்னை உற்சாகப்படுத்தியவர்.. தமிழ்மணம் வலைத்தளத்தின் மிக முக்கிய பொறுப்பாளரும் ஆவார். அவருக்கு எனது நன்றிகள்.<br /><br />இப்படி இணையம் என்கிற ஒரு தொடர்பு சாதனத்தின் மூலமாக பல நூறு உள்ளங்களின் அன்பை, நட்பை, ஆசீர்வாதத்தை நான் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். இது மென்மேலும் வளரும் வளரும் வளரும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.<br /><br />வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?<br />----கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-83332615506302021402009-07-24T05:37:00.000-07:002009-07-24T05:39:21.319-07:00கடவுளின் செல்போன் அழைப்பு!<a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmmrUVQhv5I/AAAAAAAAAKA/46H3nvr9luQ/s1600-h/cel2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5362005197153484690" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 107px; CURSOR: hand; HEIGHT: 137px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmmrUVQhv5I/AAAAAAAAAKA/46H3nvr9luQ/s320/cel2.jpg" border="0" /></a><br /><div>அதிகாலை நேரம்<br />அரைத் தூக்கத்தில்<br />சிணுங்கியது செல்போன்...<br /><br />பேசுவது யாரெனப்<br />பார்க்க விருப்பமின்றி<br />எடுத்துக் காதில் வைத்தேன்.<br /><br />’’ஹலோ, யாரு?’’ என்றேன்<br /><br />எதிர்முனையில் ஒரு புதுக்குரல்!<br /><br />’‘கடவுள் பேசுகிறேன்’’<br />என்று பதில் வந்த்து.<br /><br />’’என்னது, கடவுளா?’’<br /><br />’’ஆமாம், கடவுள்தான் பேசுகிறேன்”<br /><br />குழப்பத்தோடு<br />எண்களைப் பார்த்தேன்<br />0000000000<br />என்று அனைத்தும் பூஜ்யமாக<br />பத்து இலக்கங்கள்!<br />இது எந்த செல்போன்<br />நிறுவனத்தின் எண்கள்?<br /><br />தூக்கம் கலைந்தது...<br /><br />’’சரி இப்ப உங்களுக்கு<br />என்ன வேண்டும்?’’<br /><br />’’ எனக்கு எதுவும் வேண்டாம்.<br />அவசரமாக ஒரு<br />நல்ல சேதியைச் சொல்லவே<br />உன்னை அழைத்தேன்’’<br /><br />’’சொல்லுங்கள்’’<br /><br />’’நீ மறுபடி பிறக்கப் போகிறாய்’’<br /><br />’’என்னது?’’<br /><br />எனக்குள் மேலும் குழப்பம்.<br /><br />’’மறுபடி பிறக்க வேண்டுமெனில் நான்<br />மரணித்திருக்க வேண்டுமே?’’<br /><br />‘’அதைச் சொல்லவே இந்த அழைப்பு!’’<br /><br />‘’என்னது?’’<br /><br />‘’ நீ இறந்து விட்டாய்’’<br /><br />’’இல்லையே, உங்களோடு<br />பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?’’<br /><br />‘’இனி என்னோடு மட்டும்தான் நீ<br />பேசிக் கொண்டிருக்கப் போகிறாய்’’<br /><br />அடக்கடவுளே,<br />இது என்ன கொடுமை?<br /><br />’’எப்போது நான் இறந்தேன்?’’<br /><br />’’சில நொடிகளுக்கு முன்னால்தான்’’<br /><br />’’எழுபது வயதுவரை ஆயுள் என்று<br />என் ஜாகதம் கணிக்கப்பட்டிருந்ததே?<br />இப்போது நாற்பதுதானே ஆகிறது?’’<br /><br />’’ அது என்னால் கணிக்கப்படவில்லையே!’’<br /><br />’’அதுசரி, ஒருபாவமும் செய்யாமல்<br />எப்படி நிகழ்ந்தது என் மரணம்?<br />பாவத்தின் சம்பளம்தானே மரணம்?’’<br /><br />’’அந்த வாசகத்தையும் நான் எழுதவில்லையே!’’<br /><br />‘’சரி நான் மறுபடி<br />எங்கே, எப்போது, யாராய்<br />பிறக்கப் போகிறேன்?’’<br /><br />’’அதுவும் இன்னும்<br />முடிவு செய்யப்படவில்லை.’’<br /><br />’’ பிறகு?’’<br /><br />‘’காத்திருப்போர் பட்டியலில்<br />உன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது’’<br /><br />’’அதுவரை நான் என்ன செய்வது?’’<br /><br />‘’என்னோடு பேசிக் கொண்டிரு’’<br /><br />’’உங்களுக்கு அவ்வளவு நேரமிருக்கிறதா?’’<br /><br />‘’ நேரமிருக்கும்போது பேசுகிறேன்’’<br /><br />’’எனக்குப் பேசவேண்டுமென தோன்றினால்?’’<br /><br />’’ஒரு மிஸ்டு கால் கொடு,<br />நான் அழைப்பேன்.<br />இப்போது விடைபெறுகிறேன்’’<br /><br />இணைப்பு துண்டிக்கப்பட்டது.<br /><br />அதிகாலைக் குளிரிலும்<br />வியர்த்துக் கொட்டியது எனக்கு.<br /><br />தூக்கம் முற்றிலும் கலைய<br />என் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.<br /><br />அது கனவும் இல்லை;<br />கடவுள் சொன்னது போல நான்<br />சாகவும் இல்லை.<br /><br />பிறகு எங்கிருந்து அந்த அழைப்பு?<br />பேசியது யார்?<br /><br />திரும்ப அதே 0000000000<br />எண்ணுக்கு நானே<br />ரீ டயல் செய்தேன்!<br /><br />’ப்ளீஸ் செக் த நம்பர்’<br />என்று பதில் வருமென<br />எதிர்பார்த்தேன்.<br /><br />ஆனால் -<br /><br />’பூஜ்யத்துக்குள்ளே ஒரு<br />ராஜ்யத்தை ஆண்டுகொண்டு<br />புரியாமலே இருப்பான் ஒருவன்<br />அவனைப் புரிந்து கொண்டால்<br />அவன்தான் இறைவன்’<br />என்ற பாடல்<br />காலர் ட்யூனாகக் கேட்டது!<br />--------------------<br /><br /></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-56063130470223162012009-07-23T02:53:00.000-07:002009-07-23T03:32:14.307-07:00காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்!<a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4aKjzy3I/AAAAAAAAAJ4/Fa_HDGDeZfc/s1600-h/rahini.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5361597378546879346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4aKjzy3I/AAAAAAAAAJ4/Fa_HDGDeZfc/s320/rahini.jpg" border="0" /></a><br /><br /><div><a href="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4P1IWPGI/AAAAAAAAAJw/S4f27nTY-Ns/s1600-h/yaz.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5361597200995859554" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 107px; CURSOR: hand; HEIGHT: 80px" alt="" src="http://4.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4P1IWPGI/AAAAAAAAAJw/S4f27nTY-Ns/s320/yaz.jpg" border="0" /></a><br /><br /><br /><div><a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4EyVZ6TI/AAAAAAAAAJo/1PmgIizPhdU/s1600-h/radio.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5361597011266758962" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 118px; CURSOR: hand; HEIGHT: 82px" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Smg4EyVZ6TI/AAAAAAAAAJo/1PmgIizPhdU/s320/radio.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><div><br />’’இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குவது எஸ்.பி. மயில்வாகனன்’’ என்று காதோரம் ஒலித்த அந்த தேன்மதுர தமிழோசைக் குரலை ஒரு காலத்தில் தீவிரமாகக் கேட்டு ரசித்தவன். பாடல்களைவிட அதைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களின் குரல் மீது எனக்கு தீராத காதலே இருந்தது. </div><div></div><div>முகம் தெரியாத அந்த அன்பு அறிவிப்பாளர்களில் கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, ராஜகுரு சேனாதிபதி கனகரத்னம் என்று இன்றைக்கும் பலரது மனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த குரலுக்குச் சொந்தக்காரர்கள் பற்றிய விபரங்களும் காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது! இவர்களில் ஆறுதலாக இன்று நம்முன்னே வளைய வருபவர் பி.எச்.அப்துல்ஹமீது ஒருவர் மட்டும்தான்.<br /></div><div>எனக்கும் என் மூத்த சகோதரிக்கும்தான் இவர்களின் குரல்களைக் கேட்பதில் மிகப்பெரும் போட்டியே நடக்கும். எங்கிருந்தோ பேசும் அவர்களின் அன்பான குரலையும் பாடல்களையும் காற்றலை மூலம் வீட்டுக்குள் இழுத்து வரும் எங்கள் வீட்டில் இருந்த அந்த கறுப்பு நிற பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.<br /></div><div>அதன் பிறகு கைக்கு அடக்கமான டிரான்சிஸ்டர்கள் அறிமுகமான போது எனக்கே எனக்காக ஒரு குட்டிப்பெட்டியை வாங்கித் தரும்படி என் அப்பாவிடம் கேட்ட போது ’சும்மா இருடா, படிப்பு கெடும்’ என்று அப்போது வாங்கித் தர மறுத்துவிட்டார். பெருத்த ஏமாற்றம்.<br /></div><div>என் வகுப்புத் தோழனான பக்கத்துத் தெரு மணிகண்டனின் அப்பா, அவனுக்கு ஒரு அழகான டிரான்சிஸ்டரை வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருக்கும். அதை கையில் வைத்துக் கொண்டு பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும் என்கிற தீராத ஆசையில் மணிகண்டனின் அப்பாவிடமே ஒரு பொய்யைச் சொன்னேன்.<br /></div><div>‘’ இதே மாதிரி எனக்கும் ஒரு டிரான்சிஸ்டர் வாங்கித் தர எங்கப்பா சரின்னு சொல்லிட்டாரு. இத ஒரு பத்து நிமிஷம் எங்கப்பாகிட்ட காட்டிட்டு வந்துடவா? ‘’<br /></div><div>அவரும் ‘பத்திரமா எடுத்துட்டுப் போயிட்டு கொண்டு வரணும்’ என்ற கண்டிஷனோடு என் கையில் அந்த பாட்டுக்குருவியை என்னிடம் கொடுத்தார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை.<br />அப்பாதான் வாங்கித்தர மாட்டேன் என்கிறார், கிடைத்த இந்த ஓசி டிரான்சிஸ்டரில் ஆசைதீர, நடந்து கொண்டும்; படுத்துக் கொண்டும் பாடல்களை ரசிக்க வேண்டும் என்கிற தாகத்தோடு வேகவேகமாக வீட்டுக்கு நடக்கிறேன். அக்கா பார்த்துவிட்டால் என் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் அந்த குட்டிப் பெட்டியை மிகச் சாமர்த்தியமாக ஒளித்து மறைத்து வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.<br /></div><div>அங்கே தாத்தா இரவு நேரத்தில் படுத்துறங்கும் பாயில் ஹாயாக படுத்துக் கொண்டு அந்த அழகான டிரான்சிஸ்டரை மார்போடு அணைத்தபடி பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இலங்கை வானொலியின் அந்த அன்பு அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் மிக நெருக்கமாக என்னோடு பேசிப்பேசி பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். நேரம் போவது தெரியாமல் அந்த இன்ப அனுபவத்தில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருக்கிறேன்.<br /></div><div>தடாரென என் பக்கத்தில் எதோ சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தால், மிக அருகில் இரண்டு கால்கள்.<br /></div><div>அப்பா!<br /></div><div>மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் என் அப்பா சில நேரங்களில் கோபம்கொண்டு என்னை கம்பெடுத்து அடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது அந்தக் கம்பு அவர் கையில்!<br /></div><div>தொடையில், இடுப்பில் என அடுத்தடுத்து அடி! அடுத்த சில நொடிகளில் அந்த டிரான்சிஸ்டர் அவர் கையில்.<br /></div><div>இன்னொரு கையோடு என்னைப் பிடித்தபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி கீழே ஹாலுக்கு வருகிறார். அங்கே மணிகண்டன் கோபத்தோடு நின்று கொண்டிருக்கிறான். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அப்பாவிடம் பொய் சொல்லி அவனின் டிரான்சிஸ்டரை இரவல் வாங்கி வந்த விஷயத்தை என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டிருக்கிறான் என்பது அடுத்து நடந்த சம்பாஷணைகளில் எனக்குப் புரிந்த்து.<br /></div><div>அவனிடம் அதை நீட்டியதும் அவன் பறந்து போனான். ’இப்படி அடுத்தவங்ககிட்ட இரவல் வாங்கிட்டுவந்து பாட்டுக் கேட்கணுமா? உனக்கே அசிங்கமா தெரியலை?’ என்று அம்மாவின் பாட்டு வேறு!<br />ஆனால் விழுந்த அடிகளுக்கு ஆறுதலாக அப்பா அடுத்த நாளே என்னைக் கடைக்குக் கூட்டிப்போய், மணிகண்டனின் டிரான்சிஸ்டரைவிட மிக அழகான ஒன்றை எனக்கே எனக்காக வாங்கிக் கொடுத்தார். அக்காவுக்கு அந்த பழைய பிலிப்ஸ் ரேடியோ முழு உரிமையாகிப் போனது. அவ்வப்போது என்னிடம் ‘ஓசி’ வாங்கி டிரான்சிஸ்டரிலும் பாட்டுக் கேட்பாள்.<br />இப்படி பல விழுப்புண்களை தாங்கிய சரித்திரம் கொண்டது எனது இசை ஆர்வம்!<br /></div><div>பாடல்கள் மீது எனக்கு ஒரு ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய அந்த இலங்கைத் தமிழ் வானொலி காணாமலே போய்விட்டது. ஆனால் இவையனைத்திற்கும் ஆறுதல் பரிசாக அவ்வபோது சூரியன் எப்.எம்மில், நடுநிசி நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்பி பரவசப்படுத்துபவர் யாழ்சுதாகர். அவரது கம்பீரமான குரலும், பாடல்களுக்கு அவர் கொடுக்கிற கவிதை அறிமுகமும், அந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரங்களும் மனசுக்கு இதமான ஒன்று! அவரது வலைப்பக்கத்தில் இலங்கை வானொலி பற்றியும் பல்வேறு பாடல்கள் சம்பந்தமான அரிய பல தகவல்களும் நிறைந்து கிடக்கிறது. இசைப்ரியர்களுக்கு அது ஒரு வரப்ரசாதம்தான்.<br /></div><div>அதே போல ஒரு நாள் இணைய வானொலிகள் பற்றி அறிய, வலையை வீசிக் கொண்டிருந்ததில் ஜெர்மனியிலிருந்து ஒரு கவிக்குயிலின் குரல் என் காதுகளை குளிர வைத்தது. அதே இலங்கைத் தமிழ், பாடல்களை வழங்குவதற்குமுன் அவரது குட்டிக் குட்டிக் கவிதைகள் என அந்தக்குரல், என்னை இலங்கை தமிழ் வானொலியைக் கேட்டு ரசித்த பால்ய நாட்களுக்கே கொண்டுபோய் நிறுத்தியது. தினமும் கேட்டு ரசிக்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் எனது கணினியில் அந்தக் கவிதைக்குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...காணாமல் போன இலங்கைத் தமிழ் வானொலியின் வாரிசாக இந்தக் கவிதைக்குயிலை நான் கண்டெடுத்ததாகவே கருதுகிறேன்.<br /></div><div>'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்பதற்கேற்ப யாழ்சுதாகரின் வலைப்பக்கத்தின் இணைப்பையும், ஜெர்மனியிலிருந்து இயங்குகிற கவிதைக்குயில் திருமதி.ராகிணி அவர்களின் வலைப்பக்க இணைப்புகளையும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் கொள்கிறது என் இசைமனது....<br /></div><div><a href="http://yazhkavi.blogspot.com/">http://yazhkavi.blogspot.com/</a><br />http://yaazhsuthakar.blogspot.com/<br /><a href="http://rahini.blogspot.com/" target="_blank">http://rahini.blogspot.com/</a><a href="http://thiraviyam.blogspot.com/" target="_blank">http://thiraviyam.blogspot.com/</a><br /><a href="http://clearblogs.com/piriyaa/" target="_blank">http://clearblogs.com/piriyaa/</a><a href="http://kuyil.mazhalaigal.com/" target="_blank">http://kuyil.mazhalaigal.com/</a><br /></div><div>கேட்டு ரசித்து கிறங்க, என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பர்களே!<br />-----------</div></div></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-58598037712353360412009-07-21T02:15:00.000-07:002009-07-21T02:22:03.307-07:00பெரியாரைச் சந்தித்தேன்!<a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmWIHv94spI/AAAAAAAAAJg/CdFOpvrRq3Y/s1600-h/periyaar.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5360840598170940050" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 141px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmWIHv94spI/AAAAAAAAAJg/CdFOpvrRq3Y/s320/periyaar.jpg" border="0" /></a><br /><div>எனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.<br /><br />மாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல! மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி! ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.<br /><br />சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க?’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.<br /><br />ஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.<br /></div><br /><div>எனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.<br /><br />எல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,<br /><br />‘’உங்க பேரு என்ன தம்பி?’’ என்றார்.<br /><br />நான் சொன்னேன்.<br /><br />‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.<br /><br />பன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.<br /><br />அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.<br /></div><div>அவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.<br /><br />பல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.<br /><br />இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –<br /></div><div>இன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன?<br /><br />சல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா?<br />--------------------------------------- </div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-82472653247494332972009-07-20T04:51:00.000-07:002009-07-20T04:55:18.662-07:00பாடமாக்க வேண்டிய ஒரு நூல்!<a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmRbA06tVXI/AAAAAAAAAJY/50kyqFiqvLw/s1600-h/tm_living_smile_vidya_1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5360509526240744818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 195px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmRbA06tVXI/AAAAAAAAAJY/50kyqFiqvLw/s320/tm_living_smile_vidya_1.jpg" border="0" /></a><br /><div>திருமண விழாக்களுக்குப் போனாலோ, நண்பர்களின் பிறந்தநாள் என்றாலோ புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பதையே நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இனி என் வாழ்நாளில் இந்த ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே அடுத்தவர்களுக்கு வழங்குவதென்று முடிவு செய்து விட்டேன்.<br /><br />அந்த சுயசரித புத்தகத்தின் பெயர் ‘நான் வித்யா’ – எழுதியவர் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா. கிழக்குப் பதிப்பகம் இதை வெளியிட்டிருகிறது. இன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தியேழு. இந்த மிகக் குறைந்த வயதில் தன்னுடைய வாழ்க்கைச் சரித நூலை இதற்கு முன்னால் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயேகூட யாருமே எழுதியிருக்க வாய்ப்பில்லை.<br /><br />அந்தப் புத்தகம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில்தான் அதைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு அமைந்தது. உலுக்கி எடுத்துவிட்டது அவரது வாழ்க்கை...<br /><br />ஒரு நாவலைப் போல அவரது சிறுவயதில் துவங்கும் காட்சிகள் மெல்ல மெல்ல விரிகின்றன. ஐந்து பெண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தை அவர். அப்போது அவர் பெயர் சரவணன். அன்பான அம்மா, கண்டிப்பான அப்பா, பாசமான சகோதரிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்...அவருக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த பெண்மையின் அழகியல் உணர்வுகள், அதை உரிமையோடும் ஆசையோடும் தக்க வைத்துக் கொள்ள அவர் சந்தித்த அவமானங்கள், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆண் என்கிற அடையாளத்தை அகற்றுவதற்காக அவர் பட்ட இன்னல்கள், அதில் கிடைத்த வெற்றி, சந்தோஷம் அனைத்தையும் தாண்டி அந்த மூன்றாம்பால் இனத்தின் மீது இவருக்கு இருக்கும் சமூக அக்கறை.....<br /><br />இத்தனை போராட்டங்களுக்குமிடையில் அவருக்கு அமைந்த நண்பர்கள் வட்டம் அன்பால் மட்டுமே பின்னப்பட்டிருப்பது அவருக்கு அமைந்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது உள்மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவிய நூற்றுக்கணககான உள்ளங்களை வித்யா இந்த நூலில் அழகாக அறிமுகம் செய்திருக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களைப் போல இந்த நிஜமாந்தர்கள் நெஞ்சில் இடம்பிடித்து விடுகிறார்கள்.<br /><br />பால் வியாபாரியான இளங்கோவில் ஆரம்பிக்கிறது அந்த அன்பு மனிதர்களின் பட்டியல். செந்தில், வெங்கடேஷ், கார்த்தி, ஜான், விஜி, ராமர், முருகன், நாடகக்கலைஞர் முருகபூபதி, செல்வம், ரேவதி, ரத்னவேல், பாபு, சிநேகா, கடலை விற்கும் சுரேஷ், கரகாட்ட ஷாலினி, பூஜா, ஆயிஷா என்று தொடங்கி மதுரை கோபி, கண்ணன், மலைச்சாமி, ராஜன், அமுதன், விஜயா ஆண்ட்டி, அசோக், ஆனந்த்குமார், உதயகுமார், தேம்பாவணி, ராமர்பாண்டி, மஞ்சுமதி, சுரேஷ்குமார், முத்துராம், பழனி, கமலபாக்கியம், முத்தமிழ்ச்செல்வி, நேரு, சிவராஜ், பாலபாரதி, செழியன், இலங்கை நந்தினி, சுயம் அறக்ட்டளையின் முத்துராமன் – உமா என்று இவர் சந்தித்த அந்த நல்லமனசுக்காரர்களின் பட்டியல் நீள்கிறது. வித்யாவிற்கு மனதார உதவிகளை செய்த இந்த இதயங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.<br /><br />வித்யா, தன்னை ஒரு பெண்ணாக அறிவித்துக் கொள்ள அரசாங்கத்தோடு நிகழ்த்திய போராட்ட அனுபவங்கள் கொடுமையானவை. விலங்குகளுக்காக ஒரு தனி வாரியத்தையே அமைத்து அவைகள் திரைப்படங்களில் கொடுமைப் படுத்தபடுகின்றனவா என்பதை அறிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது அரசு. சம்பந்தப்பட்ட திரைபபட கலைஞர்களுக்கும் பல சிரமங்களைத் தருகிற அரசு அதிகாரிகள், வித்யா போன்ற திருநங்கைகளும் தங்களைப் போலவே ஆறு அறிவு கொண்ட மனித உயிர்கள்தான் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?<br /><br />வித்யாவின் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதோடு மட்டும் எனது விருப்பம் நின்றுவிடவில்லை. அது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருநங்கைகளின் மன உளைச்சல், அவர்கள் சந்திக்கிற அவலங்கள், அவமானங்களை அனைவரும் கல்வி மூலமாகவே அறிந்து கொண்டால் அவர்கள் மீது இந்த சமூகத்தில் இருக்கும் பார்வை சற்று விரிவடையும் என்பது எனது எண்ணம். அவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் மட்டுமே பார்க்கிற இந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு வரவேண்டுமானால் இந்தப் புத்தகத்த, பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.<br /><br />திருநங்கைகளின் வாழ்வியல் பின்னணியை வித்யா இதில் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்கிற நிகழ்வை மாற்றி அமைத்திருக்கிற வித்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது. எம்.ஏ. மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இன்று தனக்கென ஒரு விருப்பமான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த வித்யா,<br /><br />‘’சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன், எனக்காகவும் என்னைப் போன்ற பிற திரு நங்கைகளுக்காகவும்.‘‘ என்று இந்த நூலை முடித்திருக்கிறார்.<br /><br />வித்யாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துகள் வித்யா!<br />------------------- </div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-37211958707038295242009-07-19T21:15:00.000-07:002009-07-19T21:26:53.342-07:00முதல் வணக்கம்.....<a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmPx95V2RgI/AAAAAAAAAIw/_1_Y-jXu_eU/s1600-h/kalyankumar-jour,writer+copy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5360394027167794690" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 192px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SmPx95V2RgI/AAAAAAAAAIw/_1_Y-jXu_eU/s320/kalyankumar-jour,writer+copy.jpg" border="0" /></a><br /><div>வலைத்தளங்களின் தனக்கென ஒரு தனிச்சிறப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ’தமிழ்மணம்’ நிர்வாகத்திலிருந்து ’ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக இருக்க முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நான் அடிக்கடி பதிவுகளை இடுபவனும் அல்ல; பரபரப்பான செய்திகளை இடுபவனும் அல்ல! திரைத்துறையில் பணிபுரிவதால் நேரம் அமையும் போது எனது எண்ணங்களை பதிய வைக்கிறேன். அப்படியிருந்தும் தமிழ் மணத்தின் அழைப்பை என் எழுத்துக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் கருதுகிறேன். அந்த அழைப்பிற்கு எனது முதல் வணக்கம்...<br /><br />சில மாதங்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் ‘காற்றில் பவனிவரும் கணினித் தமிழ்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். (<a href="http://kalyanje.blogspot.com/2008_05_01_archive.html">http://kalyanje.blogspot.com/2008_05_01_archive.html</a> ) அதைப் படித்துவிட்டு திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள் பாராட்டி ஒரு பதில் எழுதியிருந்தார்கள். அதே கட்டுரையை பின்னர் அமெரிக்காவில் தமிழர் அமைப்பை நடத்தும் ‘feTNA’ ஆண்டு மலரில் பிரசுரித்து என்னை கெளரவப்படுத்திருந்தனர்.<br />அந்தக் கட்டுரையை பாராட்டியதோடு நில்லாமல் எனக்கு, தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக அழைப்பு வர காரணமாகவும் இருந்திருப்பவர் திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள்தான் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அவருக்கும் எனது அன்பான வணக்கம்.<br />இதோ அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். இனி எனது எண்ணங்களை இந்த ஒரு வார காலம் இனிதாய் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். இதில் சில நண்பர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு சந்தோஷம்! ’நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்தான்’ என்கிற புதுமொழிப்படி அவர்களை நீங்களும் உங்களின் நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்....<br />பதிவுகளில் சந்திப்போம்!</div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-7091186368710536672009-07-07T03:41:00.000-07:002009-12-05T02:48:17.420-08:00நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை!‘‘ தொடர்பு எல்லைக்கப்பால்...! ’’<br /><br />வெங்கட் தாயுமானவன், சொந்த ஊரான காவேரிப்பட்டணத்திலிருந்து சென்னைப்பட்டிணத்திற்கு சினிமா கனவுகளோடு ஓடிவந்து, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன. உதவி இயக்குனராக சில வருடங்கள், அதில் வேலை இல்லாதபோது பகுதி நேர பத்திரிக்கையாளராக சில வருடங்கள், தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில மாதங்கள் என தன் கனவுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்!<br /><br />கதை, கவிதைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் வரும் யூத் விகடனில் இவரது கவிதைகளை அடிக்கடி பார்க்க முடியும். ‘நினைப்பதெல்லாம் நடந்து விடும்’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டு அறிவாலயம் வெளியிட்ட ஒரு நூலுக்கு ஆசிரியரும், இந்த தாயுமானவன்தான்!<br /><br />அதுமட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு, இதோ இன்னும் சில நாட்களில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையோடு, தன் முதல் படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணியில், தன் வீட்டிலேயே பரபரப்பாக இருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்! அவருக்கு உதவியாக கூடவே அவரது மனைவியும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் போகத் தயாராக இருக்கிற அவரது மகனும்!<br /><br />ஆனால் இவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது.<br /><br />ஆம்; இப்போது நாற்பத்தி மூன்று வயதாகும் இந்த வெங்கட் தாயுமானவனுக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கிற ஆயுள் நீட்டிப்பு, இன்னும் ஆறுமாச காலம் மட்டுமே!<br /><br />‘’ ஆமாங்க. ஆறு மாசத்துக்குகப்பறம் என்னோட செல்போனில ரிங்க் டோனோ, என் குரலோ பதிலாகக் கிடைக்காது. அதுக்குப் பதிலா, நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் குரல் மட்டுமே கேட்கும். அந்த வாசகங்களுக்கு உண்மையான அர்த்தக்காரனாக நான் ஆகியிருப்பேன்’’ என்கிறார் எந்தவித மரண பயமும் இல்லாமல் சிரித்தபடியே!<br /><br />கேட்கிற நமக்குத்தான் மனசு கனத்துப் போகிறது.<br /><br />அப்படி என்னதான் ஆனது இந்த தாயுமானவனுக்கு?<br /><br />இரண்டு வருடங்களுக்குமுன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவரின் வலது காதுக்கு அருகில் லேசாக வலி ஏற்பட்டிருக்கிறது. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் வேலையில் மும்முரமாய் இருந்திருக்கிறார். இரவு, வலியின் தன்மை கூடியிருக்கிறது. மறுநாள் காலை, எதோ காது சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்று அதற்கான ஒரு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அவரும் பரிசோதித்துவிட்டு வலி நிவாரணிகளைக் கொடுத்திருக்கிறார்.<br /><br />வருவதும் போவதுமாக அந்த வலி இருக்க, மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் குளிக்கும்போது பார்த்தால் வலித்த இடத்தில் சின்னதாய், லேசான ஒரு கட்டி!<br /><br />குடும்ப மருத்துவர் மூலம் சில பரிசோதனைகள். அவரது சந்தேகத்தின் பேரில் மேலும் சில பரிசோதனைகள் என படிப்படியாக பரிசோதனைகளில், அதன் இறுதி முடிவு சொன்னது இதுதான்:<br /><br />அந்தக் கட்டி சாதாரண கட்டி இல்லை. உமிழ் நீர் சுரப்பியில் தோன்றி இருக்கும் புற்று நோய்கட்டி! பரோடிட் கான்ஸர் ( Parotid Cancer ) என்பது அதன் மருத்துவப் பெயர்!<br /><br />ஏற்கனவே சாதாரணமான கட்டிக்கென எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு இப்போது அடுத்த சிகிச்சை ஆரம்பமானது, அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில்! மறுபடியும் அங்கே புற்று நோய்க்கான பலவித பரிசோதனைகள்...<br /><br />‘’புற்று நோய் என்கிற அந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து போனது என்னவோ நிஜம்தான். ஆனாலும் அதை ஆபரேஷன் மூலம் அகற்றி விடலாம் என்ற மருத்துவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன.’’ என்கிறார் தாயுமானவன்.<br /><br />ஆனால் அந்த ஆறுதலும் சில மாதங்களுக்குத்தான் செல்லுபடியாகி இருக்கிறது. அந்தக் கட்டி, ஆபரேஷனுக்கு ஏற்றதாக இல்லாமல் கல் போல மிகவும் கெட்டியாக இருப்பதால், அதை அறுவை சிகிச்சைக்கென இலகுவாக்க ரேடியேஷன் தெரபி நாற்பது நாட்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.<br /><br />வாரத்தில் ஐந்து நாட்கள் என எட்டு வாரம் அந்த சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர் ஒன்றரை மாத இடைவெளிவிட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அந்த ஒன்றரை மாதம் கடந்து பார்த்த பின்னரும், கட்டி அதே நிலையில்தான் கல்லாய் இருந்திருக்கிறது! இன்னும் கூடுதலாய் இரண்டு மாதங்கள் பொறுத்திருக்கச் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அப்போதும் அது அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.<br /><br />மீண்டும் சீரியஸான பரிசோதனைகள். முடிவில் இதை ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லி வெங்கட் தாயுமானவனுக்கான ஃபைலை மூடி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.<br /><br />குழம்பிய நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேறு சில மருத்துவர்களை அணுகியபோது மிகவும் சிக்கலான இடத்தில் கட்டி இருப்பதால் ஆபரேஷன் தவிர்க்கப்பட்டிருக்கும் காரணத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே விட்டால் என்னவாகும்?<br /><br />‘வெடித்து வெளியே வரும்’ – என்பது பதிலாக வந்திருக்கிறது. மிகவும் கலங்கி நின்ற நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />சில நண்பர்கள் உதவியோடு அங்கேயும் போயிருக்கிறார் இவர்.<br /><br />அவர்களோ இவரை பரிசோதித்துவிட்டு ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லையேல் உயிருக்கு ஆபத்து‘ என்று அறிவித்திருக்கிறார்கள்!<br /><br />எதை நம்புவது?<br /><br />மேலும் குழப்பத்திற்கிடையே முகச்சீரமைப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசித்தபோதுதான் அவர் உண்மையான நிலவரத்தைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.<br /><br />காதுக்கு அருகே வளர்ந்த அந்த புற்று நோய்க்கட்டி, கழுத்து வழியாக மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்பினை பின்னிப் பிணைந்து உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த நரம்பு தொந்தரவு செய்யப்பட்டால், அது மூளையை பெருமளவில் பாதித்து ரத்தப்போக்கை அதிகரித்து அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்து விடும். பிறகு மரணத்திற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் அவரது அந்த விளக்கம்.<br /><br />சரி இதற்கான சிசிக்கைதான் என்ன?<br /><br />மருத்துவர்களின் அறிவுரைப்படி வலி தெரியாமல் இருப்பதற்கு மருந்து மாத்திரைகளும், அந்த கட்டி என்கிற குட்டி பிசாசுவின் மூலம் நோயின் தன்மை உடம்பின் மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு சில மாத்திரைகளும் எழுதித் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும், கூடவே உயிருக்கு உத்திரவாதம் இன்னும் ஆறு மாசம்தான் என்பது இன்றைய நிலை!<br /><br />உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, ஆங்கில மருந்துகளோடு மாற்றுமுறை சிகிச்சைகளையும் பார்த்திருக்கிறார் வெங்கட் தாயுமானவன். இப்படி அனைத்து மருந்து மாத்திரைகளோடு சத்தான உணவுகளையும் சாப்பிடும் வகையில் அவரின் ஒருநாள் செலவுக்கு மட்டுமே சுமார் எழுநூறு ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது! அதற்கு நிதி நிலைமை கைகொடுக்காததால்,<br /><br />‘’எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப் போட்டுட்டு, வலியை அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். இருக்கவே இருக்கார் கடவுள்! அவருகிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். ஆனா அதுக்காக சோர்ந்து போய் ஒரு நோயாளியா மூலைல முடங்கிக் கிடக்காம, என்னோட சினிமா கதைல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.... ரெண்டு வருஷமா சிகிச்சைக்கும் மருந்துக்கும் நடுவுல அலைஞ்சதுல, அப்படி இப்படின்னு இப்பதான் ஒரு ப்ரொடியூஸர் கதையை ஓக்கே பண்ணியிருக்காரு. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மூணு மாசமா கதையை மெருகேத்துனதுல வலி பெருசா தெரியலை....’’<br /><br />என்று சொல்லிமுடித்த தாயுமானவன் ஒரு சின்ன இடைவெளிவிட்டு, மெலிதாய் ஒரு பெருமூச்சோடு மேலும் பேசுகிறார்...<br /><br />‘’ஆனா இப்ப கொஞ்ச நாளா, முகத்தின் வலது பக்கத்தை அசைக்கறது சிரமமா இருக்கு. எதோ ஒரு தடை இடைஞ்சலா இருக்கு. வலது கண்ணை மூட முடியாத நிலையும் சமீபமா ஏற்பட்டிருக்கு...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் தாயுமானவனின் காது அருகே இருந்த அந்த அழிச்சாட்டியமான கட்டி, இப்போது உடைந்து புண்ணான நிலையில் இருக்கிறது!<br /><br />அடுத்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்கிற அந்த ரகசியக் கோட்டைக் கடந்து, தாயுமானவன் தனது லட்சியக் கனவின் வெற்றி முகடைத் தொட வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையாய் இருக்கிறது! கூடவே உங்களது பிரார்த்தனைகளும் மருத்துவக் கூற்றுகளை புறந்தள்ளி, அவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் பாலமாக அமையட்டும்!<br /><br />பிரார்த்தனைகளுக்கு இணையான வலிமை வேறு எதற்கும் இல்லை. அவைகள் ஒருபோதும் வீணாவதுமில்லை என்கிற நம்பிக்கை, நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே?<br />- கல்யாண்குமார்<br /><br />-இந்தப் பதிவை நான் எழுதிவிட்டு அவரது ஆயுள் நீட்டிப்புக்காக உங்களின் ஒருவனாகப் பிரார்த்தனை செய்தேன். ஆனால் அத்தனை பேரின் பிரார்த்தனைகளையும் புறந்தள்ளிய காலம், அந்த அன்பு இளைஞனை அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே காலனின் கையில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுதான் வேதனையான ஒன்று!<br /><br />ஆனால் அந்த வெங்கட் தாயுமானவனின் நம்பிக்கையான வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன...<br /><br />--------------------------------------------------------------------------கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-21728125585964417962009-06-21T23:07:00.000-07:002009-06-22T00:59:40.289-07:00என்னைப் பற்றி மாலன்…<a href="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Sj85rcpvSGI/AAAAAAAAAIg/kd8Gir9uDJQ/s1600-h/maalan.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5350058300927854690" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 84px; CURSOR: hand; HEIGHT: 101px" alt="" src="http://2.bp.blogspot.com/_5HXnPkUOnPk/Sj85rcpvSGI/AAAAAAAAAIg/kd8Gir9uDJQ/s320/maalan.jpg" border="0" /></a><br /><div>’அம்ருதா’ என்கிற இலக்கிய இணையப் பத்திரிக்கையில்<br />திரு. மாலன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் பற்றி தன்னுடைய பார்வையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், நான் அவருக்கு அறிமுகமான நாளில் ஆரம்பித்து என் பத்திரிக்கை உலக வாழ்க்கையை ஒரு ஃப்ளாஷ்பேக்காக அவர் விவரித்திருப்பது என்னை சந்தோஷம் கொள்ளச் செய்தது. நன்றி: திரு.மாலன் அவர்களுக்கு.<br /><br />அவரது கட்டுரை இதோ உங்களுக்காக...<br /></div><br /><div>அறியப்படாத ராட்சசர்கள்!<br />-மாலன்<br /></div><br /><div>அது ஒரு வித்தியாசமான விழா. அரசியல் கூட்டங்கள் போல், ஒரு முச்சந்தியில், சாலை மீது நான்கடி உயரத்துக்கு, நறுக்கப்பட்ட சவுக்குக் கம்பாங்கள் மேல் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மேடை. மேடையின் மூன்று புறங்களும் திறந்து கிடக்க முதுகுப்புறம் மாத்திரம் தென்னை ஓலையால் மூடப்பட்டிருந்தது, மேடை மீதிருந்த கூரையைத் தாங்கிப் பிடித்த கம்பங்கள் மீது ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. பாலகுமாரனின் முதல் நாவலுக்காக கோவையில் நடத்தப்பட்ட விழா. மேடையில் சில பேச்சாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.<br /><br />மளமளவென்று வீதி நிறைந்து கொண்டிருந்தது. அன்றைக்கே பாலா வெகுஜன வாசகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம்தான். தமிழக மேடைகளில் முக்கியமான அல்லது பிரபல பேச்சாளர் கடைசியில் பேசுவது வழக்கம். நான் அன்று பிரபல பேச்சாளன் இல்லை. ஆரம்பத்திலேயே என் முறை வந்தது. பேசிவிட்டு வந்து அமர்ந்து கூட்டத்தையும் பேசுபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.<br />மேடைக்குப் பின்புறமிருந்து ‘’சார்.. சார்..’’ என்று ஒரு குரல் கேட்டது. ரகசியமான அடங்கிய குரல்தான் என்றாலும், மேடையில் அமர்ந்திருந்தவர்களின் கவனத்தைத் திருப்புமளவு உரத்துத்தான் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். மேடைக்குப் பின்னிருந்த ஓலைகளை நெகிழ்த்திக் கொண்டு ஒரு இளைஞரின் முகம் தெரிந்தது. நான் நெருங்கிச் சென்று<br />‘’ என்ன?’’ என்றேன், தணிந்த குரலில். கூட்டத்தில் முன்னேறி வரும்போது கசங்கிவிடக்கூடாது எனக் கவனமாகத் தன் சட்டைக்குள் பொதிந்து எடுத்து வந்திருந்த ஒரு பொட்டலத்தை நீட்டினார். புத்தகம் போலொன்று ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது. ‘’என்ன? ‘’ என்றேன் நான் மறுபடியும். அவர், ‘’ பாருங்க’’ என்றார் சுருக்கமாக. எங்கள் உரையாடல் மேடையில் இருந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக இருந்திருக்க வேண்டும். மேடையில் அமர்ந்திருந்த சாவி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு என் நாற்காலிக்கு வந்து பிரித்தேன். கையெழுத்துப் பத்திரிக்கை!<br /><br />நான் கையெழுத்துப் பத்திரிக்கையில் துவங்கியவன். எனவே எனக்கு அதன் மீது இயல்பான ஓர் ஈர்ப்பு உண்டு. ஊற்றுப் பேனா கொண்டு கறுப்பு மசியில் குண்டு குண்டாக எழுதப்பட்ட பக்கங்கள். ( அன்று நுண்முனைப் பேனாக்கள் அறிமுகமாகியிருக்கவில்லை.) அக்கறையும் கவனமும் செலுத்தித் தயாரிக்கப்பட்ட இதழ்.<br /><br />அதிலிருந்த படைப்புகள் அப்படி அற்புதமானவை அல்ல. ஆனால் அவை அநேகமாக ஆரம்ப நிலை எழுத்துக்கள். ஆனால் அந்த இதழில் ஒரு இதழியல் பார்வை இருந்தது. (Journalistic sence). அதன் பின்னிருந்த உழைப்பு என்னைத் தொட்டது. அந்த இளைஞர், கூட்டம் நடந்த நகரைச் சேர்ந்தவர் இல்லை. அதிலிருந்து 100-150 கி.மீ தள்ளியிருந்த ஒரு சிற்றூரிலிருந்து இதற்காகவே வந்திருந்தார். கிராமப்புற நடுத்தர வர்க்கக் குடும்பம் என்பது அவரது பணிவிலும் உடுப்பிலும் தெரிந்தது.<br /><br />நெகிழ்த்திய அந்த ஓலைக்குப் பின்னிருந்த அந்த இளைஞர், இதழைப் புரட்டும் என் முக பாவங்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் பத்திரிக்கைகள் நூலகப் புத்தங்களைப் போல, எவ்வளவு நன்றாக இருந்தாலும் நாம் உரிமை கொண்டாட முடியாது. திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். க்டைசியில் சில தாள்களை வெள்ளையாக விட்டுவிடுவது கையெழுத்துப் பத்திரிக்கைகளின் இலக்கணம். வாசிப்பவர்கள் கருத்துக்களை எழுத அந்த இடம். வலைப்பதிவர்களின் வார்த்தையில் சொல்வதானால் அது பின்னூட்டப் பெட்டி. அன்று அந்த இதழை முழுதும் படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை படித்தேன். என் கருத்துக்களைச் சுருக்கமாக எழுதி, காத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் கொடுத்தேன்.<br /><br />எழுத்தின் மீதிருந்த தாகமும் பத்திரிக்கையாளனாக ஆகிவிட வேண்டும் என்ற ஆவலும் அந்த இளைஞரின் பின்னிருந்து உந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் பின்னால் விரும்பியபடியே ஒரு பத்திரிக்கையாளராக மலர்ந்தார். ‘திசைகள்’ குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். ’திசைகள்’ நின்று போனபோது ’ஜூனியர் விகட’னில் ஒரு தொடர் எழுதினார். ’கணையாழி’ இதழ்களை நான் சில காலம் எடிட் செய்து வந்தேன். அப்போதும் அதற்குப் பங்களித்தார். நான் இந்தியா டுடேவில் பொறுப்பேற்றபோதும் அதில் இணைந்து கொண்டார். கு.ப.ரா., தி.ஜானகிராமனில் ஆரம்பித்து நேற்றைக்கு எழுத வந்த ஹைகூ கவிஞன் வரை எல்லோரையும் வாசித்தவர். சிறைவாசிகளிலிருந்து அரசியல் முதலைகள் வரை பலரின் வாழ்க்கையை வரிவரியாக அறிந்தவர். காத்திரமாக எழுதக்கூடியவரும்தான்.<br /><br />ஆனால், அந்த விஸ்வாமித்திரரின் தவத்தை சினிமா என்ற மேனகை கலைத்தது. பத்திரிக்கை என்ற மோகினியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அவர் சினிமா என்ற மாய வலைக்குள் மாட்டிக் கொண்டார். கனவுகளோடு வந்தவரை காகித உலகத்தின் கடுமையான யதார்த்தங்கள் வேறு திசைக்கு விரட்டி அடித்தன.<br /><br />அவரையும் அவரைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் பத்திரிக்கை உலகம் பறிகொடுத்ததற்கு நம் ஊடகங்களில் அன்றிருந்த இயக்கவியலும் ஒரு காரணம் என்பது என் அபிப்பிராயம். அரசு, பத்திரிக்கைத் தொழிலாளர்களுக்கு அறிவித்திருந்த சம்பள விகிதங்கள் அன்று தமிழ்ப்பத்திரிகைகளில் அமல்படுத்தப்பட்டிருக்கவில்லை. ( இன்று நிலைமை மாறியிருக்கிறது. இளைஞர்கள் பலர் இதழியல் துறைக்கு – அதிலும்- தொலைக்காட்சிகளுக்கு வந்திருக்கிறார்கள்) அதனால் பத்திரிக்கையில் வேலை செய்தால் ஒருவன் தன் பெயரை அச்சிலே பார்க்கலாமே தவிர கையிலே காசைப் பார்க்க முடியாது. நாளிதழ் துணை ஆசிரியனுக்கு பெயரைப் பார்க்கிற பாக்கியம்கூடக் கிடைக்காது. ஒன்றிரண்டு பெரும் பத்திரிக்கைகளைத் தவிர மற்றவை இலக்கியப் பத்திரிகையானாலும் சரி, உயிர்தரிக்கவே போராடிக் கொண்டிருந்தன. அவை அளித்த சொற்பத் தொகையில் ஒருவன் சென்னையில் ஜீவித்திருப்பதே அதிசயம்தான். அதிலும் குடும்பத்தோடு வாழ அவன் பற்றாக்குறை பட்ஜெட்டை நிர்வகிக்கத் தெரிந்த பொருளாதார மேதையாக இருந்திருக்க வேண்டும். பத்திரிக்கைகாரனை வாங்கிவிடலாம் என்ற மதர்ப்பைப் பணப்பைகளுக்குத் தருவது அவனது பற்றாக்குறைப் பொருளாதாரம்தான்.<br /><br />ஆனால், பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே அந்த இளைஞரைக் கோடம்பாக்கம் பக்கம் அனுப்பி வைத்தன எனச் சொல்வது அத்தனை சரியல்ல. அடி நிலையில் இருக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கு அன்று பத்திரிகைகளுக்குள்ளும் வாசகர் மத்தியிலும் பெரிய அளவில் அங்கீகாரங்கள் கிடைத்து விடவில்லை. அவர்களது அறிவும் திறமையும் அந்த அச்சுப் பரப்பிற்கு அவசியம் தேவைப்பட்டன. ஆனல் அந்த அறிவின் விலாசங்கள் அறியப்பட்டதேயில்லை.<br /><br />நாளிதழ் ஆசிரியனாக இருந்தபோது நான் கவனித்திருக்கிறேன். டெலிபிரிண்டர்கள் துடித்துத் துப்பும் செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து பத்தி பிரித்துத் தலைப்பிட்டு, அச்சுக்கனுப்பிப் பத்திரிக்கையில் ஏற்ற வேண்டும். எந்தப் பத்திரிக்கை ஆசிரியனாலும் நிறுத்தி வைக்க முடியாத எந்திரங்கள் கடிகாரமும் அச்சியந்திரமும். எனவே உதவி ஆசிரியர்கள் சட்டையில் தீப்பிடித்தது போல உள்ளூர ஒரு பரபரப்பில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />ஆசிரியர் சாவி, பலசரக்குக் கடைக்காரருக்குப் பைத்தியம் பிடித்தது போல எனக் கெடு நாளின் ( பத்திரிக்கைக்காரர்கள் பாஷையில் சொன்னால் ‘இஷ்யூ’ முடிகிற நாள்) பரபரப்பைச் சொல்வார். அத்தனை பரபரப்பிலும் நிதானம் தவறாத ஓர் உயிரினம் ’துணை ஆசிரியர்கள்’ என அழைக்கப்படும் சப்-எடிட்டர்கள்.<br /><br />’’ இந்தச் செய்தியை வாசகர்கள் புரிந்து கொள்ள எளிதாக இது தொடர்புடைய முன்னர் வந்த செய்தியை சுருக்கு ’ஒரு ரீகால்’ சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று நான் சொல்லும் யோசனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு அச்சுக்குப் போகும் அவசரத்திலும் நினைவிலிருந்த செய்தியை தவறில்லாமல் பெயர்த்தெழுதிய கெட்டிக்காரர்கள் உண்டு. ஆனால், சராசரித் தமிழ் வாசகனுக்கு ஒரு மூன்றாந்தர எழுத்தாளனின் பெயர் தெரிந்திருக்கும் அளவிற்கு, இந்த ஞானவான்களின் நிழல்கூட தெரியாது. ஒரு தொலைக்காட்சித் தொடர் துணை நடிகையின் முகம் தெரிந்த அளவிற்குக் கூட இந்த ஜாம்பவான்களின் பெயர் தெரியாது. கவனம் பெறவும் வழியில்லை; காசும் அதிகமில்லை என்றால், ஏன் இதில் இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் கேட்பது எளிது.<br /><br />பலமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான வீதியில் பக்கத்து மர நிழலில் அமர்ந்து செருப்புத் தைக்கும் உழைப்பாளியை நீங்கள் என்றைக்காவது பார்த்திருக்கலாம். அவனுக்கு செருப்பு ரிப்பேர் செய்கிற வேலையில் அதிகம் போனால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அந்தக் கட்டிட வேலையில் தட்டுத் தூக்கப்போனால் அதைவிட இருமடங்கு கிடைக்கும். அது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அந்த வேலைக்குப் போக மாட்டான். ஏனெனில், அவன் மனம் செருப்புத் தைக்கும் கலையிலேயே விழுந்து கிடக்கிறது.<br /><br />இது ஒரு வகையான மன முதிர்ச்சி. என்னைக் கேட்டால் பத்திரிகையாளன் என்பவன் எழுத்தாளனை விட பரிணாம வளர்ச்சியில் பல படிகள் மேலானவன். பல எழுத்தாளர்களுக்கு முகம் உண்டு. ஆனால் பல பத்திரிக்கையாளர்களுக்கு முகம் கிடையாது. ஆனால் கூர்த்த பார்வை உண்டு.<br /><br />மலரை விடக் கனி முதிர்ந்தது. ஆனால், தலையில் வைத்துக் கொண்டாடப் பெண்கள் மலருக்குத்தானே மாலையிடுகிறார்கள். பசு இனம், பறவைகளைவிடப் பரிணாம வளர்ச்சியில் மேலானவை. ஆனால் ‘பாழாய்ப் போனதை‘ பசுவிற்கும், பழங்களை பறவைகளுக்கும் பரிமாறுகிற உலகம் நம்முடையது. மாணிக்கக்கல் இல்லாமல் வாழ்நாள் முழுதும் கழித்துவிட முடியும். ஆனால் உப்புக் கல் இல்லாமல் ஒருவேளைச் சோறு இறங்காது. ஆனல் மாணிக்கக் கல்லுக்குத்தான் மகுடத்தில் இடம்.<br /><br />நாளைக்கு நாளிதழைப் பிரிக்கும் போதேனும் இந்த முகமறியாத நண்பர்களை அரைநொடிப் பொழுதேனும் நினைத்துப் பாருங்கள். அப்போது அந்த வரிகளுக்கு அர்த்தம் கிடைக்கும்!<br />----<br /></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-73340745839030471532009-02-26T23:29:00.001-08:002010-09-27T20:04:43.883-07:00ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்!<a href="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S1dG-a2-eUI/AAAAAAAAAPo/sSQmvpTdAvQ/s1600-h/ARR_kalyan_1992_Aug.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5428885913994164546" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 218px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_5HXnPkUOnPk/S1dG-a2-eUI/AAAAAAAAAPo/sSQmvpTdAvQ/s320/ARR_kalyan_1992_Aug.jpg" border="0" /></a><br /><div><a href="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SaeXS2fCkkI/AAAAAAAAAIQ/ZTCD7Pfx7oQ/s1600-h/arrahman.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5307377035998564930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 166px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_5HXnPkUOnPk/SaeXS2fCkkI/AAAAAAAAAIQ/ZTCD7Pfx7oQ/s320/arrahman.JPG" border="0" /></a><br /><br /><div><strong><em>அ</em></strong>து ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது. எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடமிருந்து போனில் ஒரு அழைப்பு. ‘நேரில் சந்திக்கலாமா?’<br /></div><br /><br /><div>மாலை ஐந்து மணியளவில் எங்களது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நான் ‘இந்தியா டுடே’ தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். சினிமா செய்திகளுக்கான பொறுப்பும் எனதே. அப்போது ராஜீவ்மேனன், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதோடு விளம்பரப் படங்களுக்கே அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது விளம்பர ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைக்கும் ஒரு இளைஞரைப் பற்றி சொன்னார். ‘’பெயர் திலீப். பிரமாதமான இசை ஞானம். நவீன இசைக்கருவிகளைக் கையாள்வதில் அவரிடம் மிகப்பெரிய திறமை ஒளிந்திருக்கிறது’’ இது மட்டுமல்ல. அவரது ஜிங்கிள்ஸ்களைக் கேட்டுவிட்டு மணி சார் அடுத்த படத்துக்கு அவரைத்தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளார் என்ற செய்தியையும் சொன்னார்.<br /></div><br /><br /><div>அட! புதுச்செய்தியாக இருக்கிறதே என்று அந்த இளைஞனை ராஜீவ்மேனனே எடுத்த ஒரு புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டேன்.<br /><br />அடுத்த நாள் காலை. அவர் கொடுத்த திலீப்பின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கிறேன். எதிர்முனையில் திலீப். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்கிறேன். உடனே பரபரப்பான திலீப் அவசரமாக மறுக்கிறார்.<br /><br />‘’இல்லை சார்... இப்ப எதுவும் பேட்டியெல்லாம் வேண்டாம். மணி சார் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்...’’<br /><br />‘’ படத்தைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களைப் பற்றி சொல்லுங்கள். மணிரத்னம் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர் பற்றிய தகவலை முதன்முதலில் இந்தியா டுடேவில் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ‘’ என்று சொன்னதோடு ராஜீவ்மேனனிடமிருந்து உங்களின் போட்டோவைக்கூட வாங்கிவிட்டேன் என்று சொன்னதும்தான் ஒருவழியாக சமாதானமடைந்து சந்திக்க ஒப்புக் கொண்டார்.<br /><br />மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. பள்ளி மாணவனாகவும் இல்லாமல் கல்லூரி இளைஞனாகவும் இல்லாமல் நடுத்தரமான – கூச்சம் கலந்த சிரித்த முகம். அவருடன் அவரது தாயும் சகோதரியும். எனக்காகத் தெருமுனையில் இருக்கும் பேக்கரியில் வாங்கி வைத்திருந்த கேக்கும் மிக்ஸரையும் எனக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார், அவரது அம்மா. கூடவே காபியும் வந்தது.<br /><br />பின்னர் நானும் திலீப்பும் பேச ஆரம்பித்தோம். அவரது அப்பா சேகர் பற்றி, அவரது மறைவுக்குப் பிறகு இசையே முழு நேரத் தொழிலானதுபற்றி, குடும்பப் பின்னணி, சமீபத்தில் இஸ்லாம் மதத்தில் மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் ( அல்லாவின் ஆசீர்வாதம் பெற்ற ரஹ்மான் – அதுவே சுருக்கமாக ஏ.ஆர். ரஹ்மான் ) என்று மாற்றிக் கொண்டதைப் பற்றி – மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பு ஆண்டவன் அருளியது என்றும் சொன்னவர், பல நாள் பழகிய நண்பரைப் போல என்னை அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள் அழைத்துப் போய் இதுவரை பதிவாகியிருந்த இரண்டு பாடல்களை எனக்குப் போட்டுக் காட்டினார்.<br /><br />அதில் ஒன்று சின்னச் சின்ன ஆசை. அதை எனக்காக மறுபடி ஒருமுறை ஒலிக்கச் செய்யுங்கள் என்றேன். நான் ஒன்ஸ்மோர் கேட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த ரஹ்மான் இரண்டாவது முறை மறுபடி அந்தப் பாடலை ஒலிக்க வைத்தார். ‘’இந்த ஒரு பாடலில் நீங்கள் புகழ்பெறப்போவது உறுதி’’ என்று பாராட்டியதோடு எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தினேன். மணி சார் தவிர பட சம்பந்தமான கலைஞர்களே கூட இன்னும் இந்தப்பாடல்களைக் கேட்கவில்லை. உங்களுக்குத்தான் போட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களின் இந்தப் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது...’’ என்று நெகிழ்ச்சியானவர் தன் வீட்டு வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.<br /><br />ஒருவாரம் ஓடிப்போயிற்று. ஒரு இரவு நேரம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ரஹ்மானின் அம்மா.<br /><br />‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’<br /><br />அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.<br /><br />‘’இன்னும் இரண்டு நாளில் புத்தகம் வரும் அம்மா. கடைக்கு வருவதற்கு முன்னால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன்’’ என்று சொன்னேன். அலுவலகத்திலிருந்து என் வீட்டிற்குச் செல்லும் வழியில்தான் அவர்கள் வீடு இருந்த காரணத்தால் புத்தகம் ரெடியானதும் ஐந்து காப்பிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனேன்.<br /><br />ஆளுக்கொரு புத்தகமாக, அவசர அவசரமாக அவரது அம்மாவும் சகோதரியும் ரஹ்மானின் போட்டோவுடன் கூடிய செய்தி இருந்த பக்கத்தைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் கலங்கிய கண்களுடன் தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காட்சி, இன்னமும் என் மனசில் ஒரு புகைப்படமாய் பதிந்து கிடக்கிறது. ஆனால், தன் புகைப்படம் முதன்முதலாக - அதிலும் இந்தியா டுடே என்கிற புகழ் பெற்ற பத்திரிக்கையில் வந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியைக்கூட மிக நிதானமாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான். மெலிதான ஒரு புன்னகை. ‘’ ரொம்ப தேங்க்ஸ் சார்’’ என்று சுருக்கமாக தன் சந்தோஷத்தை வெளிககாட்டிக் கொண்டார் மிக அமைதியாக. அவரது அடக்கமான தன்மை அப்போதே அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.<br /><br />ரோஜா வெளியானது. ஏ.ஆர். ரஹ்மானின் படமும் செய்தியும் வராத பத்திரிக்கைகளே இல்லை. அதன் பிறகு பத்திரிக்கையாளனாக அவருடன் சில சந்திப்புகள். அப்போதெல்லாம் மற்ற பத்திரிக்கையாளர்களே வியக்கிற வண்ணம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து பேசிக் கொண்டிருப்பார். ‘’ என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவராச்சே! பேசாம இருக்க முடியுமா?’’ என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்ன ரஹ்மானின் அந்த அன்பான நெருக்கத்தை இன்னமும் அவர் தொலைத்துவிடவில்லை என்பதுதான் அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.<br /><br />அதன் பின்னர் எட்டு வருடங்கள் ஓடி விட்டன. நான் பத்திரிக்கைத் துறையிலிருந்து விலகி சினிமா, சின்னத்திரையில் பணிபுரிய ஆரம்பித்தேன். ஒரு தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நண்பர் திரு.பாலகிருஷ்ணனோடு சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பினேன். அது: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்புப் பேட்டி!<br /><br />அப்போது ரஹ்மான் இந்தி தமிழ் என்று இசையின் உச்சத்தில் இருந்தார். சந்திப்பதற்கே ஒரு வாரம் ஆனது. நானே அதைத் தயாரித்து வழங்கவிருப்பதால் ரஹ்மானை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதற்கொரு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டேன். எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல்,<br /><br />‘‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் ரீரிக்கார்டிங் இரண்டு நாளில் முடிந்து விடும்; அதன்பிறகு எனது ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலேயே பேட்டியின் ஒளிப்பதிவை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் ‘’ என்றார்.<br /><br />அது என்ன ?<br /><br />‘’ என்னை நீங்கள்தான் பேட்டி காணவேண்டும். வேறு தொகுப்பாளர்களை வைத்து எடுக்கக்கூடாது’’<br /><br />ஒப்புக் கொண்டேன். அடுத்த சில நாட்களில் நண்பர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் சுமார் ஐந்து மணி நேரங்களை எங்களுக்காக ஒதுக்கியதோடு அனைவருக்கும் மதிய உணவுக்கு தன் வீட்டிலிருந்தே பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார் ரஹ்மான்.<br /><br />சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி ஒளிபரப்பான அந்தப் பேட்டியில் ரஹ்மான் தனக்கு மிகவும் பிடித்தமான தமிழ் பாடல்களை பட்டியலிட்டு சொல்லியிருந்தார்.<br /><br />இளையராஜாவின் இசையில் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம்...<br /><br />எம்எஸ்வி இசையில் உன்னை ஒன்று கேட்பேன்...<br /><br />கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணத்தில் தொரகுனா இதுவந்தி சேவா..<br /><br />பி.பி.சீனிவாஸ் குரலில் காலங்களில் அவள் வசந்தம்....<br /><br />இப்படி அந்தப் பாடல்கள் ஏன் என்னைக் கவர்ந்தன என்கிற ரஹ்மானின் விளக்கத்தோடு அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதோடு அன்றைய தினம் அவரது இசையில் வெளியாகி இருந்த அலைபாயுதே படத்தின் பாடல் காட்சிகளை பேட்டியில் சேர்ந்துக் கொள்ள மணிரத்னம் அவர்களின் ஒப்புதலையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.<br /><br />அதோடு விடவில்லை. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான இரவு என்னை நேரில் வரவழைத்து ‘பேட்டி மிகச் சிறப்பாக வந்திருந்தது. தேங்க்ஸ்’’ என்றார். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று அவருக்கு நான் நன்றி சொல்லிவந்த அந்த நடுநிசி இரவையும் என்னால் மறக்கமுடியாது..<br /><br />இன்றைக்கு உலகில் இருக்கும் மீடியாக்கள் அனைத்தின் பார்வையும் இரண்டு ஆஸ்கார் பரிசுகளை வென்று வந்திருக்கும் ரஹ்மானின் மீது படிந்திருக்கிறது. இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும் எனது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததில் சந்தோஷம் கொள்வதென்னவோ நிஜம்!<br />------- </div></div><br />இதே பதிவை நண்பர் ஒருவர் வீடியோ காட்சிகளுடன் தன் வலைப்பக்கத்தில் மறுபதிவை அழகாக்கி இருக்கிறார். ஒரு விசிட் அடித்துப் பாருங்களேன்: http://balhanuman.wordpress.com/2010/06/29/%E0%AE%8F-கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-24823219985050676972008-12-23T23:41:00.000-08:002012-05-29T03:42:03.230-07:00பாலுமகேந்திரா பாராட்டிய கதை!அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...<br /><br />தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு<br />இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.<br /><br />உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.<br /><br />இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />பாலுமகேந்திரா<br /><br /><strong>சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்<br />(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)<br /></strong><br />அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.<br /><br />யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.<br /><br />எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!<br /><br />‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.<br /><br /> நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.<br /><br />சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.<br /><br />பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.<br /><br />ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.<br /><br />இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.<br /><br />கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.<br /><br />தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!<br /><br /> ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.<br /><br />பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.<br /><br />இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.<br /><br />இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.<br /><br />ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.<br /><br />ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!<br /><br />‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’<br /><br />படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.<br /><br />காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.<br /><br />இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.<br /><br />அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...<br /><br /><a href="mailto:muthirulandi@anbu.paasam.com">muthirulandi@anbu.paasam.com</a><br /><br /><br />--------------------<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-GGq_yKPSQyA/T8Sn644tDpI/AAAAAAAAAZA/6e-hibYaDfU/s1600/Scan%25282%2529.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="244" src="http://3.bp.blogspot.com/-GGq_yKPSQyA/T8Sn644tDpI/AAAAAAAAAZA/6e-hibYaDfU/s320/Scan%25282%2529.jpg" /></a></div>கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-43930441804721434742008-12-23T20:28:00.000-08:002008-12-23T20:42:41.105-08:00பாலுமகேந்திராவிடமிருந்து ஒரு கடிதம்...அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...<br />தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு<br />இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.<br /><br />உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.<br /><br />இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />பாலுமகேந்திராகல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.com10