Monday, April 28, 2008
இன்றைய பல்லவி
சன் டிவி இடம் மாறியது
அண்ணா அறிவாலயத்தில் இருந்து சன் டிவி தன் அலுவலகத்தை காலி செய்து விட்டு ஆழ்வார் பேட்டைக்கு இடம் மாறி இரண்டு மாசம் ஆகிறது. இதுவரை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் என இரண்டு இடத்தில் இயங்கி வந்த கலைஞர் டிவி, இன்னும் சில மாதங்களில் அதே அறிவாலயத்திற்கு ஷிப்ட் ஆக இருக்கிறது. விளம்பர ரீதியில் போட்டி இருந்தாலும் கலைஞர் டிவி தசாவதாரம் போன்ற பல படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருப்பதால் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது
டி ஆர் பி ரேட்டிங்கில்.
உதயம்: பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா
உதயம்: பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா madhumithaa.blogspot.com
Sunday, April 27, 2008
பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா
வடக்கே வாழ்ந்த மகாகவி பர்த்ருஹரி. தமிழில் காவியங்கள் படைத்த பலரின் பலத்தோடு இருக்கிறது இவரது படைப்புகள். சமஸ்க்ருதத்தில் வந்த இவரது முன்னூறு கவிதைகளை அழகு தமிழில் அற்புதமாக வடித்திருக்கிறார் மதுமிதா. ஒரு புத்தகத்தை படித்து முடித்த பின் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க சில மாதங்களுக்கு மனசு ஒப்பாது. அந்த வகையில் சேருகிறது சுபாஷிதம்.
கனமான விஷயங்கள் எளிய தமிழில் நம்மை பாதித்து பதிந்து விடுகிறது. நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று திருக்குறளைப் போல மூன்று பகுதிகளாக உள்ள இதில் பல கவிதைகள் மனசை அள்ளுகின்றன.
நன்னடத்தையால்
தந்தையை மகிழ்விப்பவனே
மகன்!
கணவனின்
நலம் விரும்புபவளே
மனைவி!
ஆபத்திலும் சுகத்திலும்
ஒரே மாதிரியான
நட்புடன் இருப்பவனே
நண்பன்!
இம்மூவரையும் இவ்வுலகில்
புண்ணியம் செய்தவர்களே
பெறுகிறார்கள்!
என்று நீதி சாதகத்தில் ஒரு கவிதையிலும்
முதலில் வேண்டாமென விலகியும்
பின்
தோன்றிய விருப்பினால்
நாணத்துடன் நழுவியும்
பின்பு
தைரியமாய்
பிறகு
காதலுடன் அச்சமில்லாமல் ஆர்வமாக ஈடுபட
காதல் விளையாட்டில்
இரண்டறக் கலந்து
இன்பம் துய்ப்பது
குலப்பெண்ணிற்கு உரியது!
என்று சிருங்கார சதகத்திலும்
பிரம்மாண்ட உலகம்
குழப்பாது
யோகியை!
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல்.
என்று வைராக்கிய சதகத்திலும் - மூன்றே மூன்று கவிதைகளில் அவரின் தனித்தன்மை தெளிவாகிறது அல்லவா?
வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை.
இன்றைய கவிதை
Friday, April 25, 2008
பதினாறு வயதினிலே - ஒரு ப்ளாஷ்பேக்
இயக்குனர் பாரதிராஜா 'மயில்' என்ற அந்த ஒரு கதைக்காக பாடுபட்டதையே ஒரு படமாக எடுக்கலாம். அதன் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்து திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் கதை சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டார்கள். அதன் பிறகு சில திரைப்பட நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளர் ராஜ்கன்னுவை சந்தித்து அதே கதையை அவரிடம் சொன்னபோது அவருக்கு அது ரொம்ப பிடித்துப் போனது. உடனே ஹீரோ தேர்வு. பாரதிராஜாவின் மனதில் இருந்த ஹீரோ யார் தெரியுமா?
நாகேஷ்!
கருப்பு வெள்ளையில் நாகேஷை ஹீரோவாக நடிக்கவைக்கும் முயற்சியில் ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கின. ஆனால் கதை விவாதத்தில் இந்தக் கதைக்கு சிவக்குமார் நன்றாக இருப்பார் என முடிவானது. அவரைப் போய் பார்த்தபோது அவர் ரொம்ப பிசி. ஆனாலும் கதை நன்றாக இருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் சம்பளம் ஐம்பதாயிரம் என்றதும் தயாரிப்பாளர் யோசிக்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் கமல் வளர்ந்து வரும் நடிகர். அவரை வைத்து எடுக்கலாம் என முடிவானது. ஜோடியாக ஸ்ரீதேவி . இவர்களை வைத்து கருப்பு வெள்ளை படமா என்று யோசித்த தயாரிப்பாளர் படத்தை கலரில் எடுக்க முடிவெடுத்தார். காமிராமேனாக நிவாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . முழுப்படத்தையும் மைசூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் படமாக்க திட்டமிட்டார் பாரதிராஜா.
வில்லனாக ரஜினி , காந்திமதி , கவுண்டமணி என்று ஒரு பட்டாளத்தையே வைத்து நாற்பது நாளில் படத்தை முடித்தார் பாரதிராஜா. மயில், என்கிற அந்தக்கதை கலைமணியின் வசனத்தில் பதினாறு வயதினிலே என்ற தலைப்பில் வெளியானது. ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமென பாரதிராஜாவே எதிர்பார்க்கவில்லையாம். குமுதம் ரிப்போர்ட்டர் தன்னை பார்க்க வந்தபோதுதான் படத்தின் வெற்றியை தான் உணர்ந்ததாக பாரதிராஜாவே சொல்கிறார்.
அந்தப் படத்தின் மூலமாக ஒரு நீண்ட இயக்குனர் வாரிசை உருவாக்கியவர் பாரதிராஜா. அதன் மூலமாக பாக்கியராஜ். அவரிடமிருந்து பார்த்திபன். அவரிடமிருந்து விக்ரமன். அவரிடமிருந்து கே. எஸ். ரவிகுமார். அவரிடமிருந்து சேரன். இப்படி நீள்கிறது அந்த இயக்குனர் வாரிசு.
தசாவதாரம் ஆடியோ வெளியீடு ஹைலைட்ஸ் !
Thursday, April 24, 2008
இன்றைய இரண்டு கவிதைகள்...
ஹை-க்யூ
அரிசிக்கும்
அரசின் தொலைக்காட்சிக்கும்
க்யூ நீள்கிறது..
கூடவே
டாஸ்மார்க் கடைகளிலும்
ஏடிஎம் சென்டர்களிலும்!
அன்புத்தொல்லை
ரயில் பயணத்தை
ரசிக்கவிடாது
எவளாவது ஒருத்தி
அவளைப் போல
இருந்து தொலைக்கிறாள்!
இலவசம்!
இந்த குழந்தைச் சிரிப்பு இலவசம்!
Wednesday, April 23, 2008
கோயிலில் யானைகள் தேவையா?
இன்று ஏப்ரல் 23ல் திருச்சூரில் இருந்த கோயில் யானை மதம் பிடித்து மூன்று உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. இதற்குமுன்னரும் கேரளாவில் இது நடந்திருக்கிறது. யானைகளின் பராமரிப்பு சரியில்லாததே இதற்குக் காரணம்.
இப்படி மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத யானைகளை கோயில்களில் வைத்துக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். இதற்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறீர்கள்? பாவம் அதை தினமும் குளிப்பாட்டி, உணவூட்டி, கூடவேயிருந்த பாகனையும் அடித்து மிதித்துக் கொன்றிருக்கிறது அந்த யானை. இது தேவையா? யோசிப்போம். யானைகளுக்கு கோயில்களிலிருந்து விடுதலையளித்து மனித உயிர்களைக் காப்போம்.
Monday, April 21, 2008
தசாவதாரம் தாமதம் ஏன்?
தசாவதாரம் தாமதம் ஏன்? - இதுதான் அனைத்து ரசிகர்களின் கேள்வி. நான் அந்தப்படத்தின் திரைக்கதை உதவியாளனாக பணியாற்றியவன். டப்பிங், ரிரிக்கார்டிங் என அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. ஆனால் படத்தில் கமல் பத்து வேடங்களில் வருவதால் கணினி கிராபிக்ஸ் வேலைகள் முடிய அதிக நாள் எடுத்துக் கொண்டதே தாமதத்திற்கு காரணம். சுமார் ஏழு இடங்களில் அதன் வேலைகள் நடந்தன - பாங்காக் உட்பட . ஒருவழியாக அந்த வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. மே இரண்டாவது வாரத்தில் திரைக்கு வந்துவிடும். முன்னதாக வரும் இருபத்தி ஐந்தாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் பாடல்கள் கேசட் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தமிழக முதல்வர் தலைமையில் நடக்க இருக்கிறது. எட்டாயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க்கப்பட்டிருக்கிறது.


